டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விபத்தில் ஒரு காலை இழந்திருந்தாலும் தன்னம்பிக்கையோடும், தளராக உழைப்போடும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் சுதா சந்திரன். 'மயூரி' என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த அவர் அதில் தன் சொந்த வாழ்க்கை கதையிலேயே நடித்தார். பின்னர் இந்தி சீரியல்களில் பிசியான நடிகையானார். 'தெய்வம் தந்த வீடு' சீரியல் முலம் தமிழ் சீரியலுக்கும் வந்தார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வந்த 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை சில காலம் நடத்தி வந்தார். சேனல் நிர்வாகத்துக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே நிகழ்ச்சியிலிருந்து விலகினார். சுதா சந்திரன் கையில் இப்போது சீரியல்கள் எதுவும் இல்லை என்றாலும் அவர் இந்தியில் நடித்த பிரபலமான தொடரான 'நாகினி' தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த இடைவெளியில் தான் நடத்தி வரும் நடன பள்ளிகளில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். 'சுதாசந்திரன் டான்ஸ் அகாடமி' என்ற பெயரில் மும்பை அந்தேரி, நாக்பூர் மற்றும் சென்னை போரூரில் இந்த நடன பள்ளிகள் இயங்குகிறது. இங்கு பரதநாட்டியம் முதல் மேற்கத்திய நடனம் வரை கற்றுத் தரப்படுகிறது. 5வயது முதல் 50 வரையிலானவர்கள் நடனம் கற்று வருகிறார்கள். போரூர் தவிர்த்து சென்னையில் மற்றுமொரு இடத்தில் நடன பள்ளி துவங்கும் திட்டத்தில் இருக்கிறார். தற்போத நடன பள்ளிகளை மேம்படுத்த மும்பைக்கும், சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கிறார்.