ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
தமிழில் பொம்மலாட்டம், ஆனந்த தாண்டவம், கோச்சடையான் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் ருக்மணி. பரதநாட்டிய கலைஞரான இவர், இந்தியில் தனுஷ் நடித்த ஷமிதாப் படத்திலும் நடித்திருந்தார். இதில் ரஜினியின் கோச்சடையான் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்த தால் அவர் கவனிக்கப்படும் நடிகையானார். அதன்பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாத நிலையில், தற்போது மணிரத்னம் இயக்கும் காற்று வெளியிடை படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வேடத்தில் நடித்து வருகிறார் ருக்மணி.
முதன்முறையாக மணிரத்னத்துடன் கார்த்தி இணைந்துள்ள இந்த படத்தில் அதிதிராவ், ஷ்ரதா ஸ்ரீநாத், மலையாள நடிகை லலிதா ஆகியோர் நடிக்கும் நிலையில், ருக்மணியும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வேடத்தில் நடிக்கிறாராம். சில நாட்களாக கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிய மணிரத்னம், தற்போது ருக்மணி சம்பந்தப்பட்ட காட்சிகளை ஊட்டியில் படமாக்கிக்கொண்டிருக்கிறாராம். ருக்மணி நடிக்கும் கேரக்டரை சுற்றியே கதை பின்னப் பட்டிருப்பதால் அவரது காட்சிகளை அதிக டயம் எடுத்து படமாக்கிக்கொண்டி ருக்கிறாராம் மணிரத்னம்.