விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
பண்ணையாரும் பத்மினியும், ஆரஞ்சு மிட்டாய், ஒருநாள்கூத்து, ராஜாமந்திரி போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் ஜஸ்டின் பிரபாகரன். இந்த படங்களைத் தொடர்ந்து உள்குத்து, காலக்கூத்து உள்பட சில படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
ஒருநாள்கூத்து, ராஜாமந்திரி பாடல்கள் ஹிட் எந்தமாதிரியான திருப்பத்தை தந்திருக்கிறது?
ஒருநாள் கூத்து படத்தில் இடம்பெற்ற அடியே அழகே பாடலைக்கேட்டு பல சினிமா பிரபலங்களே என்னை தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். குறிப்பாக, அந்த பாடலின் பிரமோவை கேட்டதுமே, பயங்கரமாக ஹிட்டாகும் என்று சொல்லிவிட்டார் விஜயசேதுபதி சார். படம் வெளியான பிறகு சிவகார்த்திகேயன் கால் பண்ணி அடியே அழகே பாட்டு ரொம்ப நல்லாருக்கு என்று சொன்னார். அதேபோல் கபாலி டைரக்டர் ரஞ்சித் என பலரும் பாராட்டினார்கள். அவர்களின் பாராட்டு எனக்கு பெரிய உற்சாகத்தைக்கொடுத்தது. அதனால் அடுத்தடுத்து இன்னும் சிறப்பான இசையை வெளிப்படுத்த வேண்டும் என்று கடுமையாக உழைக்கத் தொடங்கியிருக்கிறேன்.
இப்போது என்னென்ன படங்களின் இசைப்பணிகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள்?
உள்குத்து, காலக்கூத்து போன்ற படங்களின் பின்னணி இசைப்பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். இதில் காலக்கூத்து மதுரை கதைக்களத்தில் உருவாகியிருக்கிறது. வெட்டுகுத்து என இருந்தாலும் அதையும் தாண்டி ஒரு எமோசனல் உள்ள ப்ரஷ்ஷான கதை. இந்த படத்தின் டைட்டீல் பாடலிலேயே படத்தின் புல் மூடு இருக்கும். அந்த பாடலில் டுடுக் -என்ற சீன இசைக்கருவியை பயன் படுத்தியிருக்கிறேன்.
இதற்கு முன்பு ஹாரிஸ் ஜெயராஜ் சார்தான் அந்த இசைக்கருவியை பயன்படுத்தியிருக்கிறார். ஆனபோதும் பாடல்களில் அதிகமாக பயன்படுத்தவில்லை. ஒரு புதுமையான கலரை காண்பிக்க வேண்டும் என்பதற்காக அந்த இசைக்கருவியை அதிகமாக பயன்படுத்தியுள்ளேன். அந்த பாடலை சரண்யா ஸ்ரீனிவாஸ் பாடியுள்ளார். அடுத்து உள்குத்து எனது முதல் கமர்சியல் ஆக்சன் படம். ஒருநாள்கூத்து படத்திற்கு பிறகு அட்டகத்தி தினேஷ் நடிக்கும் படம் இது. அப்படத்தின் பின்னணி இசைப்பணிகள் தற்போது நடக்கிறது. மேலும், நான், திரில்லர் ஆக்சன் சிட்டி பேஸ் கதைகள் பண்ணுவதில் அதிக ஆர்வமாக இருக்கிறேன்.
ஹீரோக்களை பாட வைப்பது பேஷனாகி விட்டதே?
ஆரஞ்சு மிட்டாய் படத்தில் விஜயசேதுபதியின் குரல் அந்த டியூனுக்கு சரியாக இருக்கும் என்பதால் அவரை பாட வைத்தேன். ஆனால் காலக்கூத்து படத்தின் ப்ரமோஷன் பாடலுக்கு ஆண்டனிதாசனைதான் பாட வைத்தேன். காரணம் அந்த பாடலுக்கு அவரது வாய்ஸ்தான் பொருத்தமாக இருந்தது. என்னைப்பொறுத்தவரை நடிகர்களை பாட வைக்க வேண்டும் என்பதற்காக டியூனுக்கு பொருந்தாத குரலை பயன்படுத்த மாட்டேன். எனது இசையில் பண்ணையாரும் பத்மினியும் படத்தில் பேசுறேன் -என்று தொடங்கும் பாடலை மட்டுமே நான் பாடியிருக்கிறேன். அதன்பிறகு எந்த டியூனும் என் வாய்ஸ்க்கு செட்டாகாததால் பாடவில்லை.
இசையமைக்க எந்த மாதிரி நேரத்தை எடுத்துக்கொள்கிறீர்கள்?
அதிகாலை நேரம். அதாவது 3.30, 4 மணிக்கு நான் இசைப்பணிகளை தொடங்குவேன். அந்தநேரத்தில் மைண்டு ப்ரஷ்ஷாக இருக்கும். ஒருநாள் முழுக்க செய்யும் வேலையை, 2 மணி நேரத்தில் செய்துவிடுவேன். அப்படி ரெடி பண்ணும் டியூன்களை பின்னர் இயக்குனர்கள் வந்த பிறகு போட்டுக்காட்டுவேன்.
ஒருநாள்கூத்து அடியே அழகே பாடல் இந்த அளவுக்கு ஹிட்டாகும் என்று எதிர்பார்த்தீர்களா?
அந்த பாடல் சூப்பர் ஹிட்டாகும் என்று எனக்கு முன்பே தெரியும். ஆனால்,
அந்த பாடலை நான் வேறொரு படத்துக்காகத்தான் ரெடி பண்ணி வைத்திருந்தேன். ஒருநாள்கூத்து படத்துக்கு பாடல் ரெடி பண்ணி வந்தபோது அந்த பாடலைக்கேட்ட டைரக்டர் நெல்சன் சார், அந்த பாடலை ஒருநாள்கூத்துக்கே பயன்படுத்திக்கொள்ளலாமே என்றார். அந்த அளவுக்கு அந்த பாடல் அவருக்கு பிடித்திருந்தது. அதேபோல் நான் முன்பே சொன்னது போல், நடிகர் விஜயசேது பதி அந்த பாடலின் ப்ரமோவை கேட்டதுமே இது பயங்கரமா ஹிட்டாகும் என்று பெரிய நம்பிக்கையைக் கொடுத்து விட்டார். அதேபோல் அந்த பாடலும் ஹிட்டாகி விட்டது.
இதுவரை நீங்கள் இசையமைத்த படங்களில் குத்துப்பாடல்கள் இடம்பெறவில்லையே?
அந்தமாதிரி சூழல் அமையவில்லை. ஆனால் இப்போது உள்குத்து படத்தில் ஒரு குத்துப்பாட்டு பண்ணியிருக்கிறேன். ஈவினிங் நேரத்தில் கடற்கரைக்கு செல்லும் நண்பர்கள் ஆடிபாடுவது போல் அந்த பாடல் அமைந்திருக்கிறது.
கலகலக்குதடா -என தொடங்கும் எனது முதல் குத்துப்பாட்டை ஆண்டனிதாசன் எழுதி பாடியிருக்கிறார். இந்த பாடலில் மெலோடி இல்லாமல் முழுக் குத்துப்பாட்டாக பண்ணியிருக்கிறேன். எல்லோரும் கேட்டு ஈசியாக பாடுவது போன்ற டியூன். கேட்டதும் ஆடத்தோன்றும் பாடல். ரிதம் பீட் அதிகமாக இருக்கும். இந்த பாடலுக்காக ஒரே டைமில் 15 இசைக்கலைஞர்கள் வாசித்தனர்.
பாடலின் ஓப்பனிங் வரிகள் இந்த மாதிரி வேண்டும் என கேட்டு வாங்குவீர்களா?
இசைக்கு அடுத்தபடியாக பாடலில் இடம்பெறும் வரிகளும் முக்கியம். அந்த வகையில், 50 சதவிகிதம் டியூன் என்றாலும், பாடலாசிரியர்களும் 50 சதவிகிதம். அவர்கள் டியூனுக்கு எழுத வேண்டும், பாடல் சூழலில் கருத்தினை சொல்ல வேண்டும் என்கிற இரண்டு விசயங்களை மனதில் கொண்டு எழுதுகிறார்கள். எனக்கு அடியே அழகே பாடலை எழுதிய விவேக் கதைக்கும், மியூசிக்கும் டைரக்டருக்கும் சரியாக எழுதக்கூடியவர். அந்த வகையில், பெரும்பாலும் எனக்கு பாடல் எழுதும் அனைவருமே நான் எதிர்பார்க்காத வகையில் சிறப்பான வார்த்தைகளை எழுதி விடுகிறார்கள். என்னை கேட்டு வாங்க வைப்பதில்லை.
மேலும், நான் பாடல் மட்டுமின்றி, பின்னணி இசையமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். எனக்கு பிடித்ததே பின்னணி இசைதான். இசையமைத்த பிறகுதான் படங்களின் காட்சிகள் முழுமை பெறுகின்றன. அதனால் ஒவ்வொரு படங்களின் பின்னணி இசைக்கும் 10 நாள் முதல் 14 நாட்கள் வரை எடுத்துக்கொள்கிறேன். அது கதைகளைப்பொறுத்தது. பின்னணி இசையில் பெரிய அளவில் முத்திரை பதிக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக உள்ளது என்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.