ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கபாலி பீவர் மலையாள ரசிகர்களையும் நடிகர்களையும்கூட விட்டுவைக்கவில்லை. மலையாள நடிகர் ஜெயராம் தனது மகன் காளிதாசுடன் ஆரவாரமாக நேற்று அதிகாலை 2 மணிக்கே காசி தியேட்டரில் படம் பார்த்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.. நிவின்பாலியும் தான் கேரளாவில் 'கபாலி' படம் பார்ப்பதாக பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். ஆனால் மலையாள இளம் இயக்குனரும் நடிகருமான வினீத் சீனிவாசனோ நேற்று கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் காலை ஆறுமணி காட்சியை பார்க்க வந்திருந்தார். நிவின்பாலி நடித்த 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்' படத்தை இயக்கினாரே அவரே தான்.
அவர் மட்டுமல்ல, அவருடன் அவரது மனைவி திவ்யா மற்றும் அவரது உதவி இயக்குனர்கள் குழு உள்ளிட்ட பத்து பேருக்கும் குறையாமல் 'கபாலி' படம் போட்ட டீசர்ட்டுடன் 'தலைவர்' படத்தை பார்க்க ஆஜராகினர்.. இதில் என்ன பியூட்டி என்றால் காலையில் காசி தியேட்டரில் ஜெயராமிற்கு ரஜினி ரசிகர்களிடம் அவ்வளவு வரவேற்பு கிடைத்த நிலையில், இங்கே வினீத் சீனிவாசனை பலருக்கு அடையாளம் தெரியாததால் அவர்கள் வெகு இயல்பாக தியேட்டருக்குள் வளைய வந்தனர். வினீத் சீனிவாசனை போன்றவர்கள் சத்யம் தியேட்டருக்கு போகாமல், ரோகிணி தியேட்டருக்கு படம் பார்க்க வந்தது ஆச்சர்யம் தான்.. அதேசமயம் சத்யம், ஐநாக்ஸ் போன்ற தியேட்டர்களுக்கு சென்றிருந்தால் வினித் சீனிவாசனை பலரும் அடையாளம் கண்டு மொய்த்திருப்பார்கள் என்பதும் உண்மை.