ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சீயான் விக்ரம் படித்தது ஏற்காடு மான்போர்ட் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில். அந்த பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று தொடங்கியது. இதில் அந்த பள்ளியில் படித்த நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் விக்ரமும் கலந்து கொண்டார். நேற்று நடந்த முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியல் விக்ரமுடன் படித்த பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணித் தலைவர் அன்புமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களுடன் விக்ரம் மகிழ்ச்சியுடன் பேசி மகிழ்ந்தார்.
விழாவில் முன்னாள் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் விக்ரம் கலந்து கொள்ளவில்லை. நிகழ்ச்சியின் முடிவில் மாணவ மாணவிகளுடன் ஆட விரும்புவதாக பள்ளி முதல்வர் வர்கீசிடம் அனுமதி கேட்டார். அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவே மைதானத்தில் இறங்கினார் விக்ரம். அப்போது அவர் 'மாரி'படத்தில் வரும் ஓப்பனிங் சாங்கான “ஏய் பெருசு....”. என்ற குத்துப்பாடலுக்கு மாணவ, மாணவிகளுடன் இணைந்து செம குத்தாட்டம் போட்டார். இன்று நடக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் விக்ரம் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.