‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
புரியாத புதிர் படத்தில் இயக்குனரானவர் கே.எஸ்.ரவிக்குமார். அதையடுத்து ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னணி ஹீரோக்களையும் வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர், தற்போது கன்னட நடிகர் சுதீப்பை வைத்து முடிஞ்சா இவனை புடி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். மேலும், முன்பெல்லாம் முழுநேர இயக்குனராக இருந்த அவர், தனுஷின் தங்கமகன் படத்தில் அப்பா வேடத்தில் நடித்தார். அதையடுத்து சிவகார்த்திகேயனின் ரெமோ, விஜயசேதுபதியின் றெக்க போன்ற படங்களிலும் அப்பா வேடங்களில் நடித்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.
ஆக, சமீபகாலமாக கே.எஸ்.ரவிக்குமாரின் கவனம் நடிப்பு பக்கம் திரும்பியிருக்கிறது. அதனால் அவர் இனிமேல் படிப்படியாக முழுநேர நடிகராகி விடுவார் என்றுதான் கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள். ஆனால், கே.எஸ்.ரவிக்குமாரோ, நான் இப்போதும் டைரக்டர்தான். அந்த நாற்காலியில் தான் அமர்ந்து கொண்டிருக்கிறேன். நடிக்க சில வாய்ப்புகள் கிடைத்ததால் நடித்தேன். அதோடு இப்போதைக்கு இயக்குனர் நாற்காலியில் இருந்து இறங்கும் ஐடியாவும் எனக்கு இல்லை. என்னைப்பொறுத்தவரை நடிப்பு என்பது ஒரு பகுதிநேர வேலை தான். இயக்கத்தில்தான் எனது அதிகப்படியான கவனமும் இருக்கும் என்கிறார் அவர்.