ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மதுரை சார்ந்த கதை மற்றும் மதுரையில் படப்பிடிப்பு நடத்துவது கோலிவுட்டின் செண்டிமென்டாகி விட்டது. அதனால் சில இயக்குனர்கள் ஒரு நாளாவது மதுரையில் படப்பிடிப்பு நடத்தி விட வேண்டும் என்றும் மல்லுக்கு நிற்கிறார்கள். ஆனால், டைரக்டர் ஹரி, தான் இயக்கும் ஒவ்வொரு படங்களையும் தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அப்படித்தான் சூர்யா நடித்து வரும் எஸ்-3 படத்திற்காக பல வெளிநாடுகளுக்கு சுற்றினாலும், தூத்துக்குடி ஏரியாவிலும் ஒரு ரவுடியை சூர்யா துரத்தி வருவது போன்று காட்சியமைத்திருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து விடும் என்கிறார்கள்.
அதனால் இந்த படத்தை படத்தை முடித்ததும், கபாலி ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா. மெட்ராஸ் படத்தை இயக்கி முடித்த கையோடு சூர்யாவுக்குத்தான் கதை பண்ணியிருந்தார் ரஞ்சித். ஆனால் எதிர்பாராதவிதமாக ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால், சூர்யாவே அந்த படத்தை முதலில் இயக்கிவிட்டு வருமாறு ரஞ்சித்தை அனுப்பி வைத்தார். இந்நிலையில், தற்போது கபாலி ரிலீசாகி விட்டதால் அடுத்தபடியாக சூர்யாவை இயக்க தயாராகி விட்டார் ரஞ்சித்.
அப்படி அவர் இயக்கும் படம் வடசென்னை பாக்சர்கள் சம்பந்தப்பட்ட கதையில் தயாராகிறதாம். ஏற்கனவே பல படங்கள் வடசென்னை பாக்சிங் கதையில் உருவான நிலையில், ஜெயம்ரவி நடித்த பூலோகம் படம் பெரிய அளவில் பிரமாண்டமாகவும் படமாக்கப்பட்டது. ஆனால் இந்த படம் பாக்சர்களின் மறு பக்கத்தை சொல்லக்கூடிய வகையில் உருவாகிறதாம். சில பாக்சிங் காட்சிகளும் படத்தில் இருப்பதால் தனது உடல்கட்டை இன்னும் கட்டுமஸ்தாக மாற்றி நடிக் கப்போகிறாராம் சூர்யா.