தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
இமயம், கேப்டன், வசந்த், ராஜ் உள்ளிட்ட சேனல்களிலும் ஆங்கராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் காயத்ரி புவனேஷ். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்தவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சினிமா சினிமா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு, லெட்ஸ் டான்ஸ் ஸ்டுடியோ -என்ற நடன பள்ளி தொடங்கி அதன் மூலம் பிட்னஸ், நடனம், யோகா போன்ற பயிற்சிகளும் கொடுத்து வருகிறார் காயத்ரி புவனேஷ்.
தினமலர் இணையதளத்திற்காக அவரை பேட்டி கண்டபோது, அவர் நமக்களித்த பதில்கள் இங்கே இடம்பெறுகிறது...
சினிமா சினிமா நிகழ்ச்சி பற்றி சொல்லுங்கள்?
புதிய படம், வரப்போகிற படம், டிரெய்லர், படக்காட்சிகள் போன்றவை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறுகிறது. விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களே அதிகமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், சினிமா சம்பந்தமாக வெளியாகும் இந்த நிகழ்ச்சிக்கு நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே சீரியல்களில் நடித்த நீங்கள் இப்போது நடிக்காதது ஏன்?
கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி முதல் பாகத்திலும் 6 மாதம் நடித்த நான், பின்னர் குரங்கு கையில பூமாலை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தேன். இப்போது நான் எனது கேரியரை தொடங்கிய தொகுப்பாளினி இடத்துக்கே மீண்டும் வந்திருக்கிறேன். என்னைப்பொறுத்தவரை இது மட்டும்தான் பண்ண வேண்டும் என்பதில்லை, நடிப்பு, ஆங்கரிங், ரியாலிட்டி ஷோ என எந்த வாய்ப்பு கிடைத்தாலும் பயன்படுத்திக்கொள்வேன். முக்கியமாக அப்படி கிடைக்கும் வாய்ப்புகளில் எனக்கு ஸ்கோர் பண்ண வாய்ப்பு இருக்க வேண்டும். எனக்கு பிடித்திருந்தால் கிடைக்கிற வாய்ப்புகளை நல்லவிதமாக பயன்படுத்திக்கொள்வேன்.
முக்கியமாக, ரியாலிட்டி ஷோக்களில் எனக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. கார ணம், அதில் நமக்குள் இருக்கும் தனித்திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்பு கிடைக்கிறது. சிவகார்த்திகேயன் போன்றவர்கள்கூட ரியாலிட்டி ஷோக்களில்தான் தங்களது திறமையை வெளிப்படுத்திதான் பிரபலமானார்கள். அதேபோல் பெப்ஸி உமாவும் தனது தனித்திறமையை வெளிப்படுத்தி ஒரே நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அந்த மாதிரி ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்திருக்கிறேன்.
நீங்கள் நடத்தி வரும் நடனப்பள்ளி பற்றி சொல்லுங்கள்?
லெட்ஸ் டான்ஸ் ஸ்டுடியோ -என்ற பெயரில் சென்னை அண்ணா நகரில் நடனப் பள்ளி நடத்தி வருகிறேன். இதில் மொத்தம் 140 பேர் நடன பயிற்சி பெறுகிறார்கள். சிறுவர் முதல் முதியவர் வரை அனைவருமே வருகிறார்கள். நடனம், பிட்னஸ், யோகா போன்ற கலைகள் இங்கே பயிற்சி கொடுக்கப்படுகிறது. மேலும், நடனத்தில் ஹிப்ஹாப் வகை நடன பயிற்சி கொடுத்து வருகிறேன். இந்த நடனம் உலகத்தரம் வாய்ந்தது. இது மேற்கத்திய நடனம் மட்டுமின்றி கிராமியம் மற்றும் பரதநாட்டியமும் சேர்ந்த புதுமையான கலவையாகும்.
அப்படியென்றால் நீங்கள், இந்த பள்ளி மூலமே ஜூனியர் சிங்கர் போன்று ஒரு நடன நிகழ்ச்சியை சேனலில் வழங்கலாமே?
இப்போதைக்கு நிறைய ஈவன்ட்ஸ் நடத்தி வருகிறேன். அதோடு சில சேனல் களுக்கு எனது பள்ளியில் நடக்கும் நடனம், யோகா நிகழ்ச்சிகளைத்தான் வந்து சூட் பண்ணி செல்கிறார்கள். அந்த அளவுக்கு எனது பள்ளி இப்போது பிரபல மாகி விட்டது. அதனால் எதிர்காலத்தில் இங்கு வரும் திறமையானவர்களை கொண்டு பெரிய அளவில் ஈவன்ட்ஸ் நடத்தும் ஐடியா இருக்கிறது. அதோடு போட்டிகள் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறேன்.
சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் எந்தமாதிரி கேரக்டர்களுக்கு முதலிடம் கொடுப்பீர்கள்?
சீரியல்களில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு இல்லை. ஏதாவது மெசேஜ் சொல்ல வேண்டும் அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய வேடங்களாக இருக்க வேண்டும். இப்படி செலக்டீவாகத்தான் நடிப்பேன்.
சமீபகாலமாக சீரியல்களில் பிரச்சினைகளை பயங்கரமாக காண்பித்து வருகிறார்களே. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
குழந்தைகளும் சீரியல்கள் பார்க்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளாமல் சில சீரியல்கள் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, சின்ன பிரச்சினைகளை எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிற மாதிரி பெரிதாக காண்பிக்கிறார்கள். இந்த மாதிரி குடும்ப பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட அரைச்ச மாவையே தொடர்ந்து காட்டாமல், டெக்னாலஜி சம்பந்தமான கதைகளில் சீரியல் பண்ணலாம். குறிப்பாக, இந்தி சீரியல்களில் ஆதிக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. அதனால் தொடர்ந்து ஒரேமாதிரியான பிரச்சினைகளில் சீரியல்களை பார்த்த நம்முடைய நேயர்களும் அந்த சீரியல்கள் பக்கம் திரும்புகிறார்கள்.
அவர்களை தடுத்த நிறுத்த வேண்டியது தமிழ் சீரியல் நடிகர் நடிகைகளின் முக்கிய கடமையாக உள்ளது. அதனால் புதுமையான முறையில் பர்பாமென்ஸை கொடுத்து நேயர்களை இழுக்க வேண்டும். குறிப்பாக, பெப்ஸி உமா, கட்டிய சேலை, நெற்றியில் வைத்த பொட்டை கூட நம்முடைய நேயர்கள் ரசித்தார்கள். அதனால் புதிதாக ஏதாவது செய்யும்போது அதன்பக்கம் திரும்பி விடுவார்கள். அதனால் ஒவ்வொரு நடிகர் நடிகைகளும் தங்களது எபோர்ட்டை போட வேண்டும். அப்படி தனிப்பட்ட முறையில் தனித்திறமைகள் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும்போது நேயர்கள் நம் பக்கம் திரும்பி விடுவார்கள். அப்படி செய்தால் இந்தி சீரியல் மோகத்தை விரட்டியடித்து விட முடியும் என்கிறார் காயத்ரி புவனேஷ்.