பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' படம் எல்லா வகையிலும் பல சாதனைகளையும், பல புதுமைகளையும். பல ஆச்சர்யங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு தியேட்டரில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது சட்டப்படி குற்றம். அந்த குற்றத்தை செய்வதற்காக பெரம்பலூர் தியேட்டர்காரர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் நேரடியாகவே அனுமதி கேட்டிருக்கிறார்கள். அதாவது திருடுவதற்கு போலீசிடம் அனுமதி கேட்பதைப்போல. “கூடுதல் விலை கொடுத்து படத்தை வாங்கியிருக்கிறோம் போட்ட பணத்தை எடுக்க டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்க அனுமதிக்க வேண்டும்” என்று அதற்கு காரணம் கூறியிருக்கிறார்கள்.
அரசு அதிகாரிகள் உறுதியாக அதற்கு அனுமதி மறுத்ததோடு மீறி விற்றால் தியேட்டர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளனர். இதனால் கோபம் அடைந்த தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் நேற்று பெரம்பலூரில் கபாலியை திரையிடவில்லை. இதனால் கட்அவுட், பாலாபிஷேகம் தோரணம் என்று உற்சாகத்தில் இருந்த ரசிகர்கள் சோகத்தில் திரும்பினார்கள். இப்படி ஒரு நிகழ்வு தமிழ்நாட்டில் நடந்திருப்பது இதுவே முதல்முறை.