இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாள நடிகை மஞ்சுவாரியரின் தனித்த அடையாளமே நாட்டிய நாடகம் தான். அதன் மூலம் தான் அவர் சினிமாவுக்கு வந்தார். திலீப்பை திருமணம் செய்தார். ஒரு குழந்தைக்கு தயானார். பின்னர் விவாகரத்து செய்தார். மீண்டும் நடிக்க வந்தார். இத்தனைக்கும் பிறகு மீண்டும் நாட்டிய நாடகத்தின் பக்கம் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.
பிரபல மலையாள நாடக எழுத்தாளர் காவலம் நாராயண பணிக்கர் 'அபிஞான சகுந்தலா' என்ற நாட்டிய நாடகத்தை எழுதினார். இதில் நடிகை மஞ்சுவாரியரை ஆட வைத்து அந்த நாடகத்தை அரங்கேற்ற நினைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் மரணம் அடைந்து விட்டார். நாராயண பணிக்கரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டிருந்த மஞ்சுவாரியருக்கு இந்த செய்தி கிடைத்ததும். அவரது நாடகத்தை தானே இயக்கி, ஆடி அரங்கேற்றம் செய்ய முடிவு செய்தார்.
மஞ்சுவாரியரின் மான மஞ்சுவாரியர் புரொடக்ஷன் சார்பில் தானே அதை தயாரித்து அரங்கேற்றம் செய்ய முடிவு செய்தார். பல நாள் ஒத்தகை நடத்திய பிறகு திருவனந்தபுரத்தில் அரங்கேற்றம் செய்தார். முதல்வர் பிரணாய் விஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த நாட்டிய நாடகத்தை கேரளா முழுவதும் நடத்த மஞ்சுவாரியர் முடிவு செய்திருக்கிறார்.