தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஷால், ஸ்ரீதிவ்யா, ஆர்.கே.சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்க, முத்தையா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மருது. இமான் இசையமைப்பில் உருவான இப்படத்தை மதுரை அன்புச்செழியன் தயாரித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்தது. மருது படத்தை வாங்கிய பலரும் நஷ்டம் அடைந்ததாக சொல்லப்பட்டது. அதனால் அவரை வைத்து அடுத்தப் படம் எடுக்க திட்டமிட்டிருந்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பின்வாங்கிவிட்டது.
இன்னொரு பக்கம், மருது படம் தயாரிப்பில் இருந்தபோது, அவருக்கு மீண்டும் கால்ஷீட் தருவதாக சொல்லி இருந்தார் விஷால். மருது தோல்விக்குப் பிறகு அவரும் பின்வாங்கிவிட, முத்தையாவுக்கு அடுத்தப் படம் இல்லாமல்போனது. இந்நிலையில், முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தன.
இது குறித்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் விசாரித்த போது, "எங்களது நிறுவனத்துக்கு படம் இயக்குவதற்காக கதை எழுதி வருகிறார் முத்தையா. அந்தக் கதையை எழுதி முடித்தவுடன் தான் யார் நாயகன் என்பது முடிவாகும். அப்படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறாரா என்பது எல்லாம் இப்போது சொல்ல முடியாது" என்று தெரிவித்திருக்கிறார்கள்.