கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
தமிழ் சினிமாவின் மகத்தான கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் தனது நடிப்பையும், மூச்சையும் நிறுத்தி நேற்றோடு 15 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவரை நினைத்து பார்க்கத்தான் ஆளில்லை. வழக்கம்போல அவரது குடும்பத்தினர் அன்னை இல்லத்தில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மற்ற நடிகர்களும், ரசிகர்களும் கபாலி ஜுரத்தில் மூழ்கி கிடந்தார்கள்.
சென்னை கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலைக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை தலைவர் பொன் வண்ணனும், செயற்குழு உறுப்பினர் அஜய்ரத்தினமும் மேலும் இரண்டு பேருடன் 'திரண்டு' சென்று மலர் மாலை அணிவித்து அந்த மகத்தான கலைஞனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
“கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றுவதில் அரசு அக்கறை காட்டிவருகிறது. அவருக்கு மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கி 10 வருடங்கள் ஆகியும் அதனை கட்ட தென்னிந்திய நடிகர் சங்கமும் ஆர்வம் காட்டவில்லை. காலத்தால் அழிக்க முடியாத கலைஞனுக்கு காலம் தரும் மரியாதை இதுதான்” என்று வருந்துகிறான் அவரது ரசிகன்.