திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
சமீபத்தில் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் 'கசபா'.. இது பெண்களுக்கு எதிரான, அவர்களை கேவலமாக சித்தரிக்கிற படம் என்று மாதர் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்க, இன்னொரு பக்கம் மம்முட்டியின் ரசிகர் ஒருவரே இந்தப்படத்திற்கு எதற்காக யு/ஏ சான்றிதழ் கொடுத்தார்கள் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.. இந்த வழக்கு விசாரணை இன்று கோர்ட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இந்தப்படத்தை சென்சார் செய்த அதிகாரிகள் தரப்பில் தங்களது நியாயங்களையும் விளக்கங்களையும் கொடுத்துள்ளனர்..
'கசபா' படத்தில் பெண்களுக்கு எதிரான மோசமான வசனங்களில் உள்ள இரட்டை அர்த்த வார்த்தைகள் சிலவற்றை நாங்கள் மியூட் செய்துள்ளோம். இதனால் அந்த வசனங்கள் அதன் உண்மையான அர்த்ததுடன் மக்களை சென்றடைவதை தடுத்துள்ளோம்.. சில காட்சிகளை படத்தில் நடித்த மம்முட்டியே தவிர்த்திருக்கலாம் தான். ஆனால் படத்தில் அவரது கேரக்டர் அப்படிப்பட்டது.. அதனால் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கைடுலனை மீறாமல் இந்தப்படத்திற்கான சென்சார் சான்றிதழையும் கொடுத்துள்ளோம்.. இயக்குனர்களை இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என நாங்கள் கூற முடியாது.. கோர்ட் தீர்ப்பு படத்திற்கு எதிராக வருமானால் ஏற்கனவே ரிலீஸான 'கசபா' படம் மறுதணிக்கை செய்யப்படுமா என்பதை பற்றி இப்போது சொல்ல முடியாது” என்கிறது சென்சார் தரப்பு.