டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'தில்லுக்கு துட்டு' படத்தின் வெற்றியின் மூலமும் வசூல் மூலமும் சந்தானமும் ஹீரோக்களின் வரிசையில் இடம் பிடித்துவிட்டார். ஏற்கெனவே நாயகனாக நடிக்க முடிவெடுத்த பின் முன்னணி ஹீரோக்கள், வளர்த்துவிட்ட இயக்குனர்கள் கேட்டும் காமெடியனாக நடிக்க மறுத்துவிட்டார் சந்தானம். 'தில்லுக்கு துட்டு' படத்தின் வெற்றி அவரை செல்வராகவன் வரை கொண்டு போய் சேர்த்துவிட்டது. அதற்குப் பின்னணியில் தனுஷ் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரு சிவகார்த்திகேயனை வளர்த்துவிட்டவருக்கு அவருக்குப் போட்டியாக சந்தானத்தை வளர்க்கத் தெரியாதா என்ன ? .
ஹீரோவாகிப் போன வடிவேலு படங்கள் ஓடாததால் வேறு வழியில்லாமல், மீண்டும் காமெடி பண்ண வந்துவிட்டார். தொடர்ந்து அப்படியே நடிப்பாரா அல்லது மீண்டும் ஹீரோவாக மாறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். வடிவேலு இடத்தை யாராலும் தொட முடியாது, அவரது இடத்தை யாராலும் நிரப்பவும் முடியாது. ஆனால், சந்தானம் செய்த காமெடியை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும். அந்த 'டைமிங்' மட்டும் பிடித்துவிட்டால் போதும். அவரது இடத்திற்கு காமெடி செய்து சிரிக்க வைக்காத சிலர் ஆச்சரியப்படுவதுதான் ஆச்சரியம்.
அதில் முக்கியமானவர் சதீஷ். நேற்று நடந்த 'முடிஞ்சா இவன புடி' இசை வெளியீட்டில் மைக்கைப் பிடித்த ஒருவர் 'அடுத்த சந்தானம் சதீஷ் அவர்களே' என்றார். அதைக் கேட்டு சதீஷ் பெருமைப்பட்டாரோ இல்லையோ, கேட்டவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். போதாததற்கு சிவகார்த்திகேயன் அந்த மேடையில் தனுஷைப் புகழ்ந்து பேசியதை விட, படத்தின் நாயகன் சுதீப்பைப் புகழ்ந்து பேசியதை விட, சதீஷைப் புகழ்ந்து பேசியதுதான் அதிகம். பேசிக் கொண்டு வந்திருப்பார்களோ...?.
அடுத்த சந்தானம் சதீஷ் என்றால் அடுத்த வடிவேலு சூரியா...???...