பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்சினிமாவில் கதைக்கு மட்டுமல்ல, கதாநாயகன்களுக்கும் பஞ்சம்தான். அதனால்தான் காமெடியன்களைக் கூட கதாநாயகனாக்கி படம் எடுக்க முன் வருகின்றனர். தற்போது வளர்ந்து வரும் காமெடியனான கருணாகரன் உப்புக்கருவாடு படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாவில்லை.
தற்போது கருணாகரனை ஹீரோவாக வைத்து கண்ணீர் அஞ்சலி என்ற படத்தை எடுத்து வருகின்றனர். இப்படத்தில் ஆனந்தராஜ் வில்லனாகவும், 'நான் கடவுள்' ராஜேந்திரன் முக்கிய வேடமொன்றிலும் நடிக்கிறார்கள். 'சவாரி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான குகன் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். 'கண்ணீர் அஞ்சலி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
இறப்பிற்குப் பின்பு மனிதனின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஃபேன்டஸி காமெடிப் படமாம் இது.
கண்ணீர் அஞ்சலி என்ற தலைப்பு நெகட்டிவ்வாக இருக்கிறது. வேறு தலைப்பா கிடைக்கவில்லை?
''நாம் இறந்தபிறகு என்னாவோம் என ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமான சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கும். நரகம், சொர்க்கம், மறுபிறவி உட்பட இப்படி உலவும் பல நம்பிக்கைகளை மையமாக வைத்து, அதையே காமெடியாக யோசித்தால் எப்படி இருக்கும் என்பதன் விளைவே இந்த கண்ணீர் அஞ்சலி!'' என்கிறார் படத்தின் இயக்குனர் குகன்.
நல்லா யோசிக்கிறாங்கப்பா....!