ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எங்கும் கபாலி மயமாக மாற்றிவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆசிரமத்தில் ஓய்வெடுக்கின்றார். இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள கபாலி திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. ரஜினிகாந்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.
கபாலி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ராதிகா ஆப்தே ரஜினிகாந்தை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார். பொதுவாக சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் அணைத்து நடிகைகளும் கூறும் புகழுரைகளையே ராதிகா ஆப்தே கூறியுள்ளார் எனினும் அதை ராதிகா ஆப்தே கூறியுள்ளார் என்பது தான் தெலுங்கு திரை உலகவாசிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கில் ராதிகா ஆப்தே, பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக லயன் படத்தில் நடித்தார். அப்படம் திரைக்கு வந்த பின்னர், ராதிகா ஆப்தே இனி தெலுங்கு படங்களில் நடிக்கப் போவதில்லை காரணம் டோலிவுட் நடிகர்களுக்கு நடிகைகளை மதிக்க தெரியவில்லை என அதிரடியான புகார்களை அடுக்கினார். டோலிவுடில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ராதிகா ஆப்தேவின் இந்த கன்னடத்திற்கு பின்னர் அவர் தெலுங்கு படத்தில் நடிக்கவில்லை.
இந்நிலையில் கபாலி படத்தில் நடித்துள்ள ராதிகா ஆப்தே ரஜினிகாந்த் குறித்து கூறுகையில், கபாலி படத்தின் முதல் நாள் சூட்டிங் செல்கையில் ரஜினிகாந்த் கேரவனில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவரை பார்க்க முடியுமான என அவரது மேனேஜரிடம் கேட்டேன், இதனை அறிந்த ரஜினிகாந்த் தானே வெளியில் வந்து தன்னை அழைத்து பேசினார். அணைவரையும் மதிக்கும் இத்தகைய பண்புதான் அவரை சூப்பர் ஸ்டாராக உயர்த்தியுள்ளது என கூறியுள்ளார், மேலும் தான் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க விரும்புவதாகவும் ராதிகா தெரிவித்துள்ளார்.