'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவில் உள்ள குமரகோம் பகுதி மக்கள், குறிப்பாக அங்கே போட் ஹவுஸ் நடத்தி வருபவர்களும், அங்கிருந்த பயணிகளும் திடீர் சர்ப்ரைஸால் திக்குமுக்காடி போனார்கள்.. காரணம் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரின் திடீர் கேரள விசிட் தான்.. கேரளாவில் கோட்டயம் அருகில் 20 நிமிட பயண தூரத்தில் உள்ளது குமரகோம் லேக் ரிஸார்ட்.. இந்த பகுதி போட் ஹவுஸ் எனப்படும் படகு வீடுகளுக்கு பெயர் போனது.. ரம்யமான தண்ணீர் பின்னணியில் அமைந்துள்ள இந்த இடத்தில் போட் ஹவுஸ்கள் ஏராளம் உண்டு.. கேரளா வரும் பயணிகளின் சொர்க்க பூமி என்று கூட இதை சொல்லலாம்.
கடந்த வெள்ளியன்று (ஜூலை-15) சூர்யா, ஜோதிகா, அவர்களது குழந்தைகள் தேவ், தியா மற்றும் ஜோதிகாவின் சகோதரியும் நடிகையுமான நக்மா உட்பட, குடும்பத்துடன் இந்தப்பகுதியில் விடுமுறையை கழிக்கக் வந்திருந்தார்கள். கேரளாவில் இப்போது வசந்த காலம் என்பதால் லேசான சாரலுடன் கூடிய அந்த சூழலை சூர்யாவின் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் அனுபவித்தனராம். மேலும் படகு வீட்டில் அவர்களுக்கு மதிய உணவாக கேரளா ஸ்பெஷல் கறிமீன் உணவு வகைகளும் பரிமாறப்பட்டதாம். அன்றைய தினம் மாலையே கொச்சிக்கு சென்று அங்கிருந்து சென்னைக்கு கிளம்பி சென்றுவிட்டார்களாம்.