டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படம் நாளை வெளிவருகிறது. இந்தப் படத்தை காண பெங்களூருவில் இருந்து ரஜினி ரசிகர்கள் தனி விமானத்தில் சென்னை வருகிறார்கள். இது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. ஆனால் இதேபோன்ற ஒரு நிகழ்வு 130 வருடங்களுக்கு முன்னால் நடந்தது என்றால் அது ஆச்சர்யமானது தானே.
சினிமா வருவதற்கு முன்னால் 1880களில் நாடக உலகின் ராணியாக இருந்தவர் பாலாமணி அம்மாள். சொந்தமாக நாடக கம்பெனி நடத்தினார். அதில் நடித்தவர்கள் அனைவரும் பெண்களே. இவர் நடத்தும் நாடகத்துக்கு பெரிய மவுசு அப்போது. அந்த காலத்தின் கனவு கன்னியாக இருந்தார். பாலாமணியை நேரில் பார்த்தால் அதை பாக்கியமாக கருதினார்கள் ரசிகர்கள். “டேய் நான் பலாமணியை நேரில் பார்த்தவண்டா” என்று ஆண்கள் மார்தட்டிக் கொள்வார்கள். பாலாமணியின் சொந்த ஊர் கும்பகோணம். அவர் பெரிய அரண்மனை போன்ற வீட்டில் வாழ்ந்தார். அவரது வீட்டில் 40 வேலைக்காரர்கள் இருந்தார்கள். தினமும் அதிகாலை பாலாமணி அம்மாள் குளித்து விட்டு மொட்டைமாடியில் தலைதுவட்டுவார் அதை காண வெளியூர்களிலிருந்து ரசிகர்கள் வண்டிகட்டி வந்து வீட்டை சுற்றி நின்று கொண்டிருப்பார்கள்.
தாராச சங்கம் என்ற நாடகத்தில் சந்திரன், தாரை என்ற பெண்ணை அடிமையாக வைத்திருப்பார். சந்திரன் எது சொன்னாலும் தாரை கேட்பாள். ஒரு முறை “நீ எனக்கு நிர்வாணமாக வந்து எண்ணெய் தேய்ந்து விடு” என்பார் சந்திரன். அவர் பேச்சை தட்டமுடியாத தாரா, அப்படியே செய்வார். இந்த காட்சி பாலாமணி அம்மாள் நாடகத்தில் இடம்பெற்றது. சந்திரனாக ஒரு பெண் நடிக்க தாரையாக பாலாமணி அம்மாள் நடித்தார். உடலில் மெல்லிய வெள்ளை ஆடை (தற்போதைய லெக்கின்ஸ் ஆடை போன்றது) அணிந்து சந்திரனுக்கு எண்ணெய் தேய்த்து விடுவார். தீபந்தம் வெளிச்சத்தில் இந்த காட்சி அவர் நிர்வாணமாக தோன்றுவது போலவே இருக்கும். இந்த காட்சிக்காகவே அந்த நாடகம் வருடக் கணக்கில் நடந்தது.
கும்பகோணத்தில் பாலாமணி அம்மாள் நாடகம் நடந்தால் அதை பார்ப்பதற்கு ரசிகர்களை அழைத்து வர ஆங்கில அரசு, திருச்சியிலிருந்து மயிலாடுதுறைக்கு தனி ரயில் விட்டது. அந்த ரயிலுக்கு பாலாமணி ஸ்பெஷல் என்று பெயர். நாடகம் முடிந்ததும் ரசிகர்களை ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு செல்லும் ரயில்.