அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் அறிமுகமானவர் தன்ஷிகா. தமிழ்நாட்டு பெண்ணான இவர், அதன்பிறகு மாஞ்சாவேலு, அரவாண், பரதேசி, திறந்திடு சீசே போன்ற படங்களில் நடித்தவர் தற்போது ரஜினியின் கபாலி படத்திலும் பெண் கேங்ஸ்டர் வேடத்தில் நடித்திருக்கிறார். மற்ற படங்களில் கதாநாயகியாக நடித்து விட்டு ரஜினி படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தபோதும், இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. ரஜினி சார் படத்தில் நடிப்பேன் என்று நான் நினைத்து பார்த்ததே இல்லை. கபாலி படம் எனது கேரியரில் முக்கியமான படமாகியிருக்கிறது என்று பெருமையாக கூறி வருகிறார் தன்ஷிகா.
இதையடுத்து, விழித்திரு, காத்தாடி, காலக்கூத்து போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் காலக்கூத்து படத்தில் பிரசன்னா, கலையரசன், சிருஷ்டிடான்கே ஆகியோருடன் இணைந்து தன்ஷிகாவும் நடிக்கிறார். மதுரை கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஆக்சன் கதையில் தயாராகியுள்ளதாம். தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தில் தன்ஷிகாவுக்கு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தில்லான மதுரை பெண் வேடமாம். அவரது துணிச்சலைப் பார்த்துதான் கலையரசனுக்கு அவர் மீது காதல் பிறக்குமாம். அந்த வகையில், பேரண்மை, பரதேசி, கபாலி பட வரிசையில் இப்படமும் தனக்கு முக்கியமான படமாக கருதுகிறார் தன்ஷிகா.