இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அபூர்வ ராகங்கள் தொடரில் பத்மினி என்ற வேடத்தில் நடித்து வருபவர் ஏகவள்ளி. இந்த தொடரில் எனக்கு அமைதியான வேடம். எத்தனை பெரிய பிரச்சினைகள் என்றாலும் அதை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொண்டு போராடும் பெண்ணாக நடிக்கிறேன். அதனால் எனக்கு பர்பாமென்ஸ் பண்ண நல்ல ஸ்கோப் கிடைத்திருக்கிறது. அதையடுத்து வம்சம் தொடரில் ஒரு அண்ணி வேடத்தில் நடிக்கிறேன். இதுதவிர மதியால் வெல் என்ற படத்தில் வில்லனின் மனைவியாக நடிக்கிறேன். தவிர சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறேன் என்கிறார் இந்த ஏகவள்ளி.
அவரிடத்தில் எந்தமாதிரியான சீரியல்களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறீர்கள்? என்று கேட்டபோது,
என்னைப்பொறுத்தவரை ஜாலியான சீரியல்களில் நடிப்பதுதான் ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் எனக்கு கிடைப்பதோ பிரச்சினைக்குரிய கேரக்டர்கள்தான். ஆனால் அப்படி அந்த பிரச்சினைக்குரிய கேரக்டர்களே இறுதியில் சந்தோசத்துடன் முடிவடைய வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன். அந்த வகையில், சீரியல்களில் பிரச்சினைகளை மட்டுமின்றி, சந்தோசங்களை யும் சொல்லக் கூடிய இரண்டுவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசையாக உள்ளது என்கிறார்.
அவரிடத்தில், சமீபகாலமாக சில சீரியல்களில் கொடூரமான மற்றும் வக்ரத்தன்மையுள்ள காட்சிகள் அதிகமாக காண்பிக்கப்படுகிறதே? இதுபற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்றபோது,
மக்கள் எந்த மாதிரியான சீரியல்களுக்கு அதிக வரவேற்பு கொடுக்கிறார்களோ அதை மனதில் கொண்டுதான் சீரியல்கள் உருவாகின்றன. அதோடு, இப்படி
சீரியல்களில் சொல்லப்படும் விசயங்கள் எல்லாமே நாட்டு நடப்புகள்தான். மக்கள் மத்தியில் நடக்கிற விசயங்களைத்தான் கதையாக்குகிறார்கள். அந்தமாதிரி விசயங்கள் தங்களது வாழ்க்கையில் நடந்திருப்பதால் அதை நேயர்களும் விரும்பிப்பார்க்கிறார்கள். அதனால் சீரியல்களை தவறாக விமர்சனம் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் ஏகவள்ளி.