துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
சூப்பர்ஸ்டாரின் 'கபாலி' வரும் ஜூலை-22ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு ரசிகர்கள் அதை மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாட தயாராக இருக்கிறார்கள்.. வழக்கம்போல கட் அவுட், தோரணங்கள் பட்டாசுகள் என கலைகட்டினாலும் கூட கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யவேண்டாம் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.. இங்கே நம்மவர்கள் இப்படி கொண்டாட்டத்திற்கு தயாராக, கேரளாவில் உள்ள மலையாள நடிகர்களின் ரசிகர்களும், நம் தமிழ் நடிகர்களுக்கு அங்குள்ள ரசிகர்களும் இணைந்து 'கபாலி' மூலம் பள்ளி மாணவர்களுக்கு உதவ முயற்சி எடுத்துள்ளார்கள்.
'கபாலி' கேரளாவில் சுமார் 300 தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.. இதில் தலசேரி என்கிற ஊரில் ரஜினி, மோகன்லால், மம்முட்டி, திலீப், பிருத்விராஜ், விஜய், சூர்யா, துல்கர் சல்மான், ஜெயசூர்யா என மொழி பாகுபாடு இல்லாமல் அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் 'கபாலி' படத்தின் சிறப்பு காட்சியை பொறுப்பேற்று நடத்த இருக்கிறார்கள். இதில் கிடைக்கும் பணத்தை வைத்து தலசேரியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கும் அங்கே படிக்கும் மாணவர்களுக்கும் தேவையான உபகரணங்கள், நோட்டு, பாடப்புத்தகங்கள் என வாங்கி கொடுக்க இருக்கிறார்களாம். ரசிகன் என்றால் காசை வீணாக்குபவன் அல்ல, நல்ல காரியங்களுக்காக செலவு செய்பவன் என்பதை மக்களுக்கு உணர்த்தவே இந்த திட்டம் என்கிறார்களாம் ரசிகர்கள் அனைவரும்.