பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்திய சினிமா சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு நிகழ்வு 'கபாலி'க்காக நடக்க இருக்கிறது. பெங்களூரைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் தனி விமானத்தில் சென்னை வந்து 'கபாலி' படம் பார்த்துவிட்டு, விருந்து சாப்பிட்டுவிட்டு பெங்களூர் திரும்புகிறார்கள். 'கபாலி' விளம்பரம் வரையப்பட்ட ஏர்ஆசியா விமானத்தில் அவர்கள் வருவது குறிப்பிடத்தக்கது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியை இந்திய அஞ்சல்துறை சிறப்பு அஞ்சல் உறை வெளியிட்டு பதிவு செய்ய இருக்கிறது. இது தொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படம் வருகிற 22ந் தேதி வெளிவருகிறது. இந்தப் படத்தை காண்பதற்காக ரஜினி ரசிகர்களை ஏர்ஆசியா விமான நிறுவனம் சிறப்பு விமானத்தில் பெங்களூருவில் இருந்து சென்னை அழைத்து வருகிறது. படம் பார்த்த பிறகு அன்றைய தினமே பெங்களூர் அழைத்துச் செல்கிறது. ஒரு படத்துக்காக சிறப்பு விமானம் இயக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் இந்திய அஞ்சல் துறையின் அஞ்சல் தலைகள் சேமிப்பு பிரிவு சிறப்பு நினைவு உறைகளை வெளியிட உள்ளது. அந்த நினைவு உறைகள் பெங்களூருவில் இருந்து ரஜினி ரசிகர்களுடன் பயணித்து சென்னை வரும். பின்னர் அவைகள் அஞ்சல் தலை சேமிப்பு மையத்தில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.