ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூப்பர் ஸ்டார் நடித்துள்ள 'கபாலி' படம் நாளை மறுநாள் வெளிவர இருக்கிறது. கடைசி நேரத்தில் படத்துக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டு வருகிறது. டிக்கட் கட்டணம் அதிகமாக இருப்பதாக ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒருவர் ரஜினி தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்று போராட்டம் நடத்தினார். முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்தார். அதுவும் புறக்கணிக்கப்பட்டது.
இந்த நிலையில் மதுரை திருநகரைச் சேர்ந்த மகராஜன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றதில் 'கபாலி' பாடல்களில் சர்ச்சைக்குரிய வரிகளை நீக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் “கபாலி படத்தில் கபிலன் எழுதிய “உலகம் ஒருவனுக்காக...” என்று தொடங்கும் பாடலில் சில சாதியை குறிப்பிடும் வரிகள் இடம் பெற்றுள்ளது. ஒரு பிரிவினர் மனதை புண்படுத்துவதாக அது உள்ளது. சில வரிகள் பொதுப்பிரிவினரையும், சில வரிகள் பிற்படுத்தப்பட்டவர்களையும் காயப்படுத்துவதாக உள்ளது. அந்த வரிகளை நீக்க உத்தரவிடவேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.