தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அதர்வா நடித்த கணிதன் படத்தில் வில்லனாக நடித்தவர் தருண் அரோரா. அசாம் மொழிப்படங்கள் மட்டுமின்றி இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவர், தற்போது சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் கத்திச்சண்டை படத்திலும் நடிக்கிறார். இதே படத்தில் இன்னொரு வில்லனாக தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடித்தபோதும், விஷால், தருண் அரோரா ஆகிய இருவரும்தான் சண்டை காட்சிகளில் மோதிக்கொள்கிறார்களாம்.
அப்படி அவர்கள் இணைந்து நடித்த சண்டை காட்சிகள் மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளதாம். இந்த சேதியை கேள்விப்பட்ட இயக்குனர் மிஷ்கின், ஆகஸ்ட் மாதம் விஷாலை வைத்து தான் தொடங்கவிருக்கும் துப்பறிவாளன் படத்திலும் தருண் அரோராவை வில்லனாக நடிக்க வைக்கும் யோசனையில் இருக்கிறாராம். ஆக, துப்பறிவாளனில் சில வில்லன் நடிகர்கள் இடம்பெறும் நிலையில், தருண் அரோரா முக்கிய வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.