ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நிஜ சம்பவங்களை படமாக்குவதும், நிஜ மனிதர்களின் வரலாற்றை படமாக்குவதும் பாலவுட்டின் புதிய டிரண்ட். அதிலும் குறிப்பாக கிரிக்கெட் பற்றி அதிக படங்கள் வருகிறது. சமீபத்தில் அசாருதீன் பற்றிய படம் வெளியானது. தற்போது தோனி பற்றி படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அடுத்து சச்சின், யுவராஜ் கதை படமாக இருக்கிறது.
இந்த நிலையில் 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்ற வரலாறு சினிமாவாகிறது. இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் சிறப்புமிக்க நிகழ்வு அது. அதன் பிறகுதான் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு நட்சத்திர அந்தஸ்தை பெற்றது. அந்த உலக கோப்பையை வென்றபோது நடந்த சுவரஸ்யமான சம்பவங்களை கொண்டு '1983' என்ற டைட்டிலுடன் படம் தயாரிக்க இருக்கிறார்கள். 1983 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது முதல் உலக கோப்பையை வென்றது வரையிலான சம்பவங்கள் இடம் பெறுகிறது. இதில் இடம்பெறும் ஒவ்வொரு சம்பவமும் 100 சதவிகிதம் உண்மையானவை.
அந்தப் போட்டியில் விளையாடிய 14 வீரர்களில் 3 பேர் தவிர மற்ற 11 பேரும் மும்பையில் இந்த படம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று தங்கள் பெயரையும், சம்பவத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய கபில்தேவ் “உலகத்தில் உள்ள எதைப் பற்றியும் கவலைப்படாமல் கோப்பை ஒன்றையே மனதில் நிறுத்தி விளையாடினோம். அந்த ஒவ்வொரு நொடியும் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவை. அது திரைப்படமாக பதிவு செய்யப்படுவது சந்தோஷமாக இருக்கிறது. ஊக்கம் அளிக்ககூடிய அந்த நிகழ்வு இன்றைய இளம் தலைமுறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்று குறிபிட்டார்.
இந்தப் படத்தை சிசிஎல் நிறுவனர் விஷ்ணு இந்தூரி, பாந்தோம் பிலிம்சுடன் இணைந்து தயாரிக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்புகள் தொடங்குகிறது. 1983ம் ஆண்டில் நடந்த உலக கோப்பை இறுதிபோட்டியை மறு உருவாக்கம் செய்கிறார்கள். அணி வீரர்கள் தோற்றத்தில் உள்ள நடிகர்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்திய சினிமாவில் இந்தப் படம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று இப்போதே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.