விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்ட பின்னர் படங்களில் நடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டார் நஸ்ரியா. தங்களது நெருங்கிய நண்பர்களின் விஷேச வைபவங்களில் மட்டும் அவ்வப்போது கலந்துகொண்ட நஸ்ரியாவை கடந்த ஒரு வருடகாலத்தில் ஏதாவது சினிமா விழாக்களில் பார்த்திருந்தால் அதை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படிப்பட்ட நஸ்ரியா, சில தினங்களுக்கு முன் 'பஷீரிண்டே பிரேமலகனம்' என்கிற படத்தின் துவக்க விழாவுக்கு தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் வருகை தந்து ஆச்சர்யப்படுத்தினார்..
காரணம் இந்தப்படத்தில் ஹீரோவாக நடிப்பது அவரது கொழுந்தனார், அதாவது பஹத் பாசிலின் தம்பியான பர்ஹான் பாசில் என்பதுதான். இந்த விழாவில் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிலரும் கலந்துகொண்டனர்.. பஹத் பாசிலுக்கு ஹிட்டாக அமைந்த 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்கிற டைட்டிலின் சாயல் வருவதுபோலவே இந்தப்படத்திற்கு 'பஷீரிண்டே பிரேமலகனம்' என பெயர் வைத்துள்ளார்கள்.. கடந்த வருடம் 'நான் ஸ்டீவ் லோபஸ்' என்கிற படம் மூலம் சினிமாவில் அறிமுகமான பர்ஹான் பாசிலுக்கு இது இரண்டாவது படமாகும்.