இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த வருடத்தில் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய மூன்று படங்களை தொடர்ச்சியாக கொடுத்து ஹாட்ரிக் சாதனை படைத்தார் பிருத்விராஜ். அதில் முதல் ஹிட்டான 'என்னு நிண்டே மொய்தீன்' பாணியிலே தொடர்ந்து இன்னொரு காதல் காவியமாக வெளியான படம் தான் அனார்கலி'. பிருத்விராஜுடன் பிஜூமேனன் இணைந்து நடித்த இந்தப்படத்தில் பிரியல் கோர் என்கிற வடக்கத்தி நடிகை பிருத்விராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப்படத்தை இயக்கியதன் மூலம் பிரபல கதாசிரியரான சாச்சி, இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
தற்போது சாச்சி தனது அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்துவிட்டார். படத்தின் ஹீரோ..? வேறு யார்.. சாட்சாத் பிருத்விராஜே தான். 'அனார்கலி' படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை அந்தமான் தீவில் நடத்திய சாச்சி, இந்தப்படத்தின் படப்பிடிப்பை ஸ்ரீலங்காவிலும், லண்டனிலும் நடத்த இருக்கிறாராம். அதற்கேற்ற மாதிரி படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக சிங்கள நடிகை ஒருவரும், லண்டன் பெண் ஒருவரும் நடிக்க இருக்கிறார்களாம். படத்திற்கான கதாநாயகி வேட்டை இப்போது நடக்கிறது.. இந்த வருட இறுதியில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிகிறது.