டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மும்பையில் டென்னிஸ் விராங்கனை சானியா மிர்சாவின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நடந்தது. பாலிவுட் நடிகர் சல்மான்கான் புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் சானியா மிர்சா பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது:
என்னையும் சினிமாவையும் தொடர்பு படுத்தி அடிக்கடி செய்திகள் வருகிறது. நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா? என்ற கேள்வி அடிக்கடி என்னை நோக்கி கேட்கப்படுகிறது. என்னால் சினிமாவில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நடிக்கும் எண்ணம் இல்லை. தயாரிப்பாளர் பராக்கான் எனது நல்ல நண்பர். அவர் என் கதையை சினிமாவாக எடுக்கப்போவதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. இதுவரை யாருக்கும் அந்த அனுமதியை நான் வழங்கவில்லை.
என் வாழ்க்கை கதை சினிமாவாக எடுக்கபடுமா என்பது எனக்குத் தெரியாது. என் வாழ்க்கையை சினிமாவாக எடுத்தால் அது எனக்கு கிடைத்த கவுரவமாக நினைப்பேன். எனது பாத்திரத்தில் தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா, ப்ரீணி சோப்ரா பொருத்தமாக இருப்பார்கள். ப்ரீணிதி சோப்ரா என் சாயலில் இருப்பார். அவர் நடித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றார் சானியா மிர்சா.