ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதுமுகம் சசிகுமரன் தயாரித்து இயக்கும் படம் 'பப்பரப்பம்'. சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார், கே.எஸ்.ரோஸ் இசை அமைக்கிறார். வினோத் கிஷன் என்ற புதுமுகத்துடன் இஷாரா நாயர், ஜான் விஜய், மைம் கோபி நடிக்கிறார்கள். இன்னொரு நாயகியாக புதுமுகம் யாமினி நடிக்கிறார். ஐ.டி ஊழியரான யாமினி, கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். முதல் படத்திலேயே போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இதுபற்றி யாமினி கூறியதாவது: கோயம்புத்தூர் தான் நான் பிறந்து, வளர்ந்த ஊர். சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் கனவாக இருந்தது. ஆனால் வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை. படித்து ஒரு டிகிரி வாங்கு, பிறகு பார்க்கலாம் என்றார்கள். அவர்கள் ஆசைக்காக படித்து டிகிரி வாங்கினேன். அதன் பிறகு ஐ.டி கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தேன். நேரம் கிடைக்கும்போது மாடலாக பணியாற்றினேன். அப்போதுதான் 'பப்பரப்பம்' படத்துக்கு ஆடிசன் நடப்பதாக கேள்விப்பட்டு கலந்து கொண்டேன். 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட ஆடிசனில் நான் தேர்வு பெற்றேன். நல்ல நடிகை என்ற பெயர் வாங்க வேண்டும் என்பதே லட்சியம். என்கிறார் யாமினி.