பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சல்மான் நடித்துள்ள சுல்தான் படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி கொண்டிருக்கிறது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் சல்மான்கான். இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர் இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி, சல்மானை கொண்டு ஒரு படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வந்தது. ஆனால் இப்போது அவர் சல்மானை இயக்கவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. சுல்தான் படத்தில் நடித்த முடித்தவுடனேயே சல்மான், இயக்குநரிடத்தில் முழு கதையை கேட்டாராம். ஆனால் சல்மான் எதிர்பார்த்தபடி அவர் கதையை முழுவதுமாக முடிக்கவில்லை. இதனால் சல்மான் வேறு ஒரு இயக்குநரின் படத்தில் நடிக்க தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. அனேகமாக சல்மானின் அடுத்தப்படம் கொரியன் படமான ‛ஒடே டூ மை பாதர்' படத்தின் ரீ-மேக்காக இருக்கலாம் என்று தெரிகிறது.