பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் ஆர்கே நடிப்பில், டைரக்டர் பி.வாசு இயக்கத்தில் உருவாகியிருக்கும் "புலிவேஷம்" படம் என் சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக அமையும் என்று இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் தேவாவின் மகனான ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியராஜனின் டபுள்ஸ் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதுவரை 58 படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், தற்போது ஆர்.கே.வின் புலிவேஷம், ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ் சினிமாவில் இசையின் போக்கு முன்பு மாதிரி இல்லை. இப்படி போட்டுக் கொடுங்க என இயக்குனர்கள் கேட்கிறார்கள். எனவே வேறு யோசனையின்றி நாங்களும் அதைச் செய்கிறோம். நல்ல பாடல், மெலடிப் பாடல் போடலாம் என்றால், அது பழசு என்று ஒதுக்கும் அபாயம் உள்ளதால்தான் என்னைப் போன்ற இசையமைப்பாளர்கள் தங்கள் ட்ரெண்டை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானோம். தமிழ் சினிமாவில் 2000 இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் 50 பேர்தான் பிஸியாக உள்ளனர். காலத்துக்கு ஏற்ப மாறிக்கொள்ளாவிட்டால் இவர்களும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
கானா, குத்துப்பாடல்கள் சீக்கிரம் ஹிட்டாகும். ஆனால் அதே வேகத்தில் அழிந்துவிடும். ஒரு ஓ போடு ஹிட்டாச்சு. அப்புறம், அப்படி போடு... வந்துச்சு. பிறகு மன்மத ராசான்னாங்க, போட்டு தாக்குன்னு பாடினாங்க. இப்ப ஜில்லாவிட்டு ஜில்லா வந்து பாட்ட கேட்கிறாங்க. ஆனால் இவை எதுவும் நிரந்தரமில்லை. மெலடி பாடல்களோ காலத்தால் அழிவதில்லை. நெஞ்சம் மறப்பதில்லை.... பாட்டை இன்றைக்கும் கேட்கிறோம். போவோமா ஊர்கோலம் என்றைக்கும் கேட்கிறோம்.
பி.வாசு இயக்கிய, ஆர்.கே. நாயகனாக நடித்துள்ள புலிவேஷம் படத்தில் வாரேன் வாரேன் கூடவாரேன் ஏழு ஜென்மத்திலும் என் உசிரை தர்றேன்.... என்ற மெலடி பாட்டை போட்டு இருக்கிறேன். இந்த பாட்டைக் கேட்டு, என் படங்களில் இளையராஜாவுக்கு பிறகு ஸ்ரீகாந்த் தேவாதான் மெலடி பாட்டை நல்லா தந்திருக்கார் என்று வாசு சார் பாராட்டினார். இந்த பாராட்டை 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதற்கு சமமா நான் மதிக்கிறேன். ரொம்ப நாளைக்குப் பிறகு நானே நிறைவாக உணர்ந்தது புலிவேஷம் பட பின்னணி இசை சேர்ப்பின்போதுதான். இதற்கான முழு பெருமையும் ஆர்கேவை சேரும். அவர் ஆதரவு இல்லாமல் போயிருந்தால் சாத்தியமில்லை, என்று கூறியுள்ளார்.