Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புலிவேஷம்தான் எனக்கு திருப்புமுனை : ஸ்ரீகாந்த தேவா நம்பிக்கை!!

14 ஆக, 2011 - 12:18 IST
எழுத்தின் அளவு:

நடிகர் ஆர்கே நடிப்பில், டைரக்டர் பி.வாசு இயக்கத்தில் உருவாகியிருக்கும் "புலிவேஷம்" படம் என் சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக அமையும் என்று இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் தேவாவின் மகனான ஸ்ரீகாந்த் தேவா, பாண்டியராஜனின் டபுள்ஸ் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதுவரை 58 படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், தற்போது ஆர்.கே.வின் புலிவேஷம், ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ் சினிமாவில் இசையின் போக்கு முன்பு மாதிரி இல்லை. இப்படி போட்டுக் கொடுங்க என இயக்குனர்கள் கேட்கிறார்கள். எனவே வேறு யோசனையின்றி நாங்களும் அதைச் செய்கிறோம். நல்ல பாடல், மெலடிப் பாடல் போடலாம் என்றால், அது பழசு என்று ஒதுக்கும் அபாயம் உள்ளதால்தான் என்னைப் போன்ற இசையமைப்பாளர்கள் தங்கள் ட்ரெண்டை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானோம். தமிழ் சினிமாவில் 2000 இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் 50 பேர்தான் பிஸியாக உள்ளனர். காலத்துக்கு ஏற்ப மாறிக்கொள்ளாவிட்டால் இவர்களும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

கானா, குத்துப்பாடல்கள் சீக்கிரம் ஹிட்டாகும். ஆனால் அதே வேகத்தில் அழிந்துவிடும். ஒரு ஓ போடு ஹிட்டாச்சு. அப்புறம், அப்படி போடு... வந்துச்சு. பிறகு மன்மத ராசான்னாங்க, போட்டு தாக்குன்னு பாடினாங்க. இப்ப ஜில்லாவிட்டு ஜில்லா வந்து பாட்ட கேட்கிறாங்க. ஆனால் இவை எதுவும் நிரந்தரமில்லை. மெலடி பாடல்களோ காலத்தால் அழிவதில்லை. நெஞ்சம் மறப்பதில்லை.... பாட்டை இன்றைக்கும் கேட்கிறோம். போவோமா ஊர்கோலம் என்றைக்கும் கேட்கிறோம்.

பி.வாசு இயக்கிய, ஆர்.கே. நாயகனாக நடித்துள்ள புலிவேஷம் படத்தில் வாரேன் வாரேன் கூடவாரேன் ஏழு ஜென்மத்திலும் என் உசிரை தர்றேன்.... என்ற மெலடி பாட்டை போட்டு இருக்கிறேன். இந்த பாட்டைக் கேட்டு, என் படங்களில் இளையராஜாவுக்கு பிறகு ஸ்ரீகாந்த் தேவாதான் மெலடி பாட்டை நல்லா தந்திருக்கார் என்று வாசு சார் பாராட்டினார். இந்த பாராட்டை 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதற்கு சமமா நான் மதிக்கிறேன். ரொம்ப நாளைக்குப் பிறகு நானே நிறைவாக உணர்ந்தது புலிவேஷம் பட பின்னணி இசை சேர்ப்பின்போதுதான். இதற்கான முழு பெருமையும் ஆர்கேவை சேரும். அவர் ஆதரவு இல்லாமல் போயிருந்தால் சாத்தியமில்லை, என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

கோமாளி ரசிகன் - Poonai Vesam Kurukku theru,இந்தியா
14 ஆக, 2011 - 15:28 Report Abuse
 கோமாளி ரசிகன் ரண்டக்கா..ரண்டக்கா....தினம் ஒரு படம் பாக்கும் என்னை போல கோமாளி கூத்தாடி ரசிகர்களுக்கு இந்த செய்தி மிக மிக வர பிரசாதம்...
Rate this:
யானை வேஷம் - dubai ,இந்தியா
14 ஆக, 2011 - 13:14 Report Abuse
 யானை வேஷம்  சினிமா கோமாளி ரசிகனுக நாட்டில் உங்க பின்னாடி இருக்கும் வரைக்கும்;;;உங்க காட்டுல பண மழைதான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in