விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
தமிழ் நாட்டில் மலையாள படங்கள் நேரடியாக வெளியாகும், தெலுங்கு படங்கள் நேரடியாகவும், டப் செய்யப்பட்டும் வெளியாகும். ஆனால் கன்னட படங்கள் வெளியாவதில்லை. கன்னட படங்களை தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக சென்னையில் கன்னட திரைப்பட விழா நடத்துகிறார்கள். கர்நாடக சலனசித்ர அகாடமி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ஆகியவை இங்குள்ள இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்புடன் இணைந்து இந்தப் பட விழாவை நடத்துகிறது.
வருகிற 28ந் தேதியிலிருந்து 31ந் தேதி வரை ரஷ்யன் கலாச்சார மையத்தில் 4 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திதி, மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமாச்சாரி, பர்ஸ்ட்ரேங் ராஜு, ரங்கிதாரங்கா, சிவலிங்கா, கர்வா, யூடேர்ன், மாரிகொண்டவாரு படங்கள் திரையிடப்படுகிறது. இது தொடர்பாக கர்நாடக சலனசித்ர அகாடமி தலைவர் எஸ்.வி.ராஜேந்திர பிரசாத் பாபு கூறியதாவது:
கர்நாடகாவில் உள்ள சுமார் 900 தியேட்டர்களில், 500 தியேட்டர்களில் பிற மொழி படங்கள் தான் வெளிவருகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, போஜ்புரி மொழிப் படங்கள் வெளிவருகிறது. ஆனால் கன்னட படங்கள் கர்நாடகாவைத் தவிர வேறெங்கும் வெளியிடப்படுவதில்லை. தற்போது கர்நாடகாவில் புதிய இளைஞர்கள் புதிய சிந்தனைகளோடு படம் இயக்குகிறார்கள். கன்னட சினிமாவை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தவும், கன்னட படங்கள் தமிழ்நாட்டில் வெளியிடப்படவும் வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த படவிழாவை நடத்துகிறோம். கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் இதனை துவக்கி வைக்கிறார் என்றார்.
பேட்டியின் போது நடிகை சுஹாசினி, தென்னிந்திய பிலிம் சேம்பர் தலைவர் கனகராஜ், கர்நாடக பிலிம் சேம்பர் தலைவர் கோவிந்த், விழா ஏற்பாட்டாளர் தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.