'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புதுமுக இயக்குனர் சூர்யா இயக்கியுள்ள படம் அன்னாத்த குப்பத்துல வாத்யாரும் தலயும். வடசென்னை மக்களின் வாழ்வியலில் கலந்த ஹாரர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக ஒரு கானா பாடலை சமீபத்தில் கானா பாலா பாடியுள்ளார். பத்மாவதி அடியே பத்மாவதி, சிரிக்குதடி பாரே சிரிப்பா சிரிக்குதடி -என்று தொடங்கும் அந்த பாடலின் வரியைக்கேட்டதுமே, அதில் அதிக இம்ப்ரஸ் ஆகி விட்டாராம் பாலா.
அதையடுத்து, அந்த பாடலை எழுதிய டைரக்டர் சூர்யாவை அழைத்து, வரிகள் ரொம்ப பிரமாதமாக உள்ளது. அதேபோல் டியூனும் அருமையாக உள்ளது. பொதுவாகவே வடசென்னை கானா பாடல்கள் என்றாலே நான் அதிக ஈர்ப்பாகி விடுவேன். அதிலும், பத்மாவதி அடியே பத்மாவதி -என்று தொடங்கும் வரிகள் என்னை அதிகமாக கவர்ந்து விட்டன. நான் இந்த மாதிரி பாடலை பாடுவதற்கு முன்பே அதை ரசித்து பாடினால் அந்த பாடல்கள் பெரிய ஹிட்டாகி விடும்.
அதோடு, கானா பாடல் என்றால் பசங்க ஜாலியாக பாடுவது போல்தான் சமீபகாலமாக அதிகமாக இடம்பெற்று வருகிறது. ஆனால் இந்த பாடல் ஒரு ஹீரோ, தனது மனைவிக்கு காதலன் இருந்த விசயத்தை தெரிந்த பிறகு சோகமாக பாடும் பாடல் என்பதால், அந்த பாடலின் சூழலும் என்னை வெகுவாக பாதித்து விட்டது. அதனால், அந்த ஹீரோ கதாபாத்திரமாக நான் மாறி பாடலை பாடிய போது நிஜமாலுமே, உருகி விட்டேன் என்று தனது பீலிங்ஸை சொன்னாராம் கானா பாலா.