ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தனது சித்தியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சென்னையை காலி பண்ணிவிட்டு ஆந்திரா சென்ற அஞ்சலி, பின்னர் தனது பெற்றோருடன் அங்கு செட்டிலாகி விட்டார். ஆனபோதும், அந்த பிரச்சினைக்குப்பிறகு சென்னைக்கு வந்தால் சித்தியுடன் தேவையில்லாத மோதல் ஏற்படும் என வருவதையே தவிர்த்து வந்தார் அஞ்சலி. அதையடுத்து சூர்யாவுடன் சிங்கம்-2 படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுவதற்கு அவுட்டோருக்கு வந்தபோது தனது பாதுகாப்புக்காக சில நபர்களை அழைத்து வந்திருந்தார் அஞ்சலி.
அதன்பிறகும் அந்த பாதுகாப்பை தொடர்ந்து வந்த அவர், தற்போது யாரையும் உடன் அழைத்து வருவதில்லை. தனது உதவியாளரான ஒரு பெண்ணை மட்டுமே சென்னைக்கு அழைத்து வருகிறார். இதுபற்றி அஞ்சலி கூறும்போது, நான் ஆந்திரா பெண்ணாக இருந்தாலும், என்னை வளர்த்தது தமிழ் சினிமாதான். அந்த வகையில், இங்குதான் எனக்கு நண்பர்கள் அதிகமாக உள்ளனர். அதனால் சென்னை எனது சொந்த ஊர் மாதிரிதான். எனக்கு இங்கு நல்ல பாது காப்பு இருக்கிறது. அதனால்தான் நான் மட்டுமே தனியாக படப்பிடிப்புகளுக்கு வந்து செல்கிறேன்.
மேலும், தமிழ் சினிமாவில் என்னை கவர்ச்சி வேடங்களில் நடிக்க வைத்தபோதும், அழுத்தமான வேடங்களும் கிடைக்கிறது. என்னை வித்தியாசமான கோணங்களில் காண்பிக்க டைரக்டர்கள் ஆசைப்படுகிறார்கள். அதனால் அதை புரிந்து கொண்டு மாறுபட்ட நடிகையாக என்னை வெளிப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறேன் என்று கூறும் அஞ்சலி, சில படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்றாலும், சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்பதால், தோல்விகளை கண்டு மனசை தளர விடாமல் நடித்து வருகிறேன் என்கிறார் அஞ்சலி.