பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஸ்ரீகாந்த்-லட்சுமிராய் நடித்த செளகார்பேட்டை படத்தை இயக்கியவர் வடிவுடையான். அந்த படத்தில் ஸ்ரீகாந்த்தை மந்திரவாதி-பேய் என இரண்டுவிதமான கேரக்டர்களில் நடிக்க வைத்த அவர், அதையடுத்து பொட்டு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பரத் மற்றும் நமீதா, இனியா ஆகியோரும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்கிறார்கள். குறிப்பாக, இதுவரை கவர்ச்சி புயலாக நடித்து வந்த நமீதாவை இந்த படத்தில் பயங்கரமான மந்திரவாதி வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார் வடிவுடையான்.
கதைப்படி இந்த படத்தில் இளம்பெண்களை கொன்று சுடுகாட்டில் புதைத்து அந்த சக்திகளை வசப்படுத்தும் மந்திரவாதியாக நமீதா நடிக்கிறார். அந்த வகையில், இனியாவை அவர் கொன்று புதைத்து விட, அவர் ஆவியாக வந்து நமீதாவுடன் மோதுவாராம். அதனால் மந்திரவாதியான நமீதா- பேயாக மாறும் இனியாவும் மோதிக்கொள்ளும் காட்சிகள் படுபயங்கரமான முறையில் படமாக்கப்பட்டு வருகிறதாம்.
மேலும், இந்த மந்திரவாதி கெட்டப்புக்காக தலையில் இருந்து முட்டி வரை ஜடாமுடியை தொங்கவிட்டபடி, கழுத்தில் எழும்புக்கூடு மாலைகளை தொங்க விட்டு நடித்திருக்கும் நமீதா, பேண்ட்-டீசர்ட் அணிந்து கவர்ச்சிகரமாகவே நடிக்கிறாராம். அதேசமயம் கவர்ச்சியை விட ஆவேசமே தூக்கலாக இருக்க வேண்டும் என்பதற்காக கண்கள், முகபாவணைகளில மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறாராம் நமீதா.