ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'யாமிருக்க பயமே', 'கோ-2' உள்பட பல படங்களை தயாரித்த ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக வெளிவரவிருப்பது - கவலை வேண்டாம். ஜீவா, காஜல் அகர்வால் கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை 'யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டீகே இயக்கி வருகிறார். ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ரவி கே சந்திரன் இயக்கத்தில் யான் என்ற படத்தில் நடித்தார் ஜீவா.
அந்தப்படத்தினால் தயாரிப்பாளருக்கு 11 கோடி நஷ்டம் ஏற்பட்டது. எனவே ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்துக்கு சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் நடிப்பதாக வாக்குறுதி கொடுத்தார் ஜீவா. அதன்படி அவர் நடித்துவரும் படம்தான் கவலை வேண்டாம். இப் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஜீவாவின் 'கவலை வேண்டாம்' படத்தின் ரிலீஸ் தேதியும் குறிக்கப்பட்டு விட்டது!
ஆயுதபூஜை விடுமுறையை ஒட்டி அக்டோபர் 7 ஆம் தேதி 'கவலை வேண்டாம்' படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர். இதே தினம் தான் சிவகார்த்திகேயனின் 'ரெமோ' படமும் ரிலீசாகிறது. எனவே ஜீவாவின் படத்தை தள்ளி வைக்கலாமா என ஆலோசிக்கப்பட்டதாம். ஜீவாவோ சிவகார்த்திகேயன் படத்துக்காக நம் படத்தை தள்ளி வைப்பதற்கு சம்மதிக்க மாட்டடேன் என்று தெரிவித்தாராம்.
அதனை தொடர்ந்து, அக்டோபர் 7 ஆம் தேதி 'கவலை வேண்டாம்' படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாக தயாரிப்பு தரப்பினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் ஜீவா, சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் ரிலீசாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கவலை வேண்டாம் படத்துக்கு முன்னதாக ஜீவா நடித்து பல மாதங்களாக காத்திருக்கும் 'திருநாள்' படம் அடுத்த மாதம் வெளியாகிறது.