டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திருமணத்திற்கு பிறகும் கலைச்சேவையை தொடர்ந்து வரும் அமலாபால், தமிழில் பசங்க-2, அம்மா கணக்கு போன்ற படங்களில் நடித்தவர், மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். ஷாஜகானும் பரிகுட்டியும் என்ற படத்தில் மீண்டும் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். தமிழில்கூட தனுஷின் வடசென்னை படத்தில் அவரும் ஒரு நாய கியாக நடிக்கயிருக்கிறார். ஹெப்புலி என்ற கன்னட படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆக, ஒரு எல்லைக்கோடு வைத்து அதற்கேற்ற கதைகள், கதாபாத்திரங்களாக செலக்ட் பண்ணி நடிப்பை தொடர்ந்து வருகிறார் அமலாபால்.
மேலும், அவரது உடல்கட்டும் திருமணத்திற்கு பிறகு எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியே இருப்பதால் அமலாபாலை நடிக்க வைப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதோடு, அமலாபாலைப் பொறுத்தவரை நடிப்பில் ஆரம்ப காலத்தில் எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அதே ஆர்வத்தை இப்போதும் வெளிப்படுத்தி வருகிறார். குறித்த நேரத்தில் ஸ்பாட்டில் ஆஜராகி விடுப வர், டைரக்டர்களிடம் டயலாக் பேப்பரை வாங்கி எந்தமாதிரி பர்பாமென்ஸ் கொடுக்கலாம் என்று உள்வாங்கிக் கொண்டு கேமரா முன்பு வருகிறாராம்.
அப்படி வருவதற்கு முன்பு டைரக்டர்களிடம், அந்த சீனில் எந்தமாதிரியான நடிப்பை வெளிப்படுத்தலாம் என்பதற்கு உதாரணமாக, தான் பல கோணங்களில் நடித்துக்காட்டுகிறாராம். அதைப்பார்த்து அதில் எந்த நடிப்பை ஓகே பண்ணலாம் என்பதை தேர்வு செய்ய முடியாமல் திணறிப்போகிறார்களாம் டைரக்டர்கள். அந்த அளவுக்கு இந்த நடிப்பு போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா -என்கிற அளவுக்கு அசத்துகிறாராம் அமலாபால்.