ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இசை அமைப்பாளர்கள் விஸ்வநாதன்&ராமமூர்த்தி இரட்டையர்கள் தமிழ் சினிமாவை கால் நூற்றாண்டுகள் மெல்லிசையால் தாலாட்டினார்கள். கேரளாவைச் சேர்ந்த விஸ்வநாதனும், திருச்சியை சேர்ந்த ராமமூர்த்தியும் இசை அமைப்பாளர் சுப்பாராமிடம் வேலை பார்த்தார்கள். ராமமூர்த்தி கிதாரிஸ்ட், விஸ்வநாதன் ஆர்மோனியம். சுப்பாரமின் பாடல்களில் இவர்களின் பங்கு பெரிதாக இருக்கும்.
1952ம் ஆண்டு இசை அமைப்பாளர் சுப்பாரமன் திடீரென இறந்து விட அவர் இசை அமைத்து வந்த படங்கள் பாதியில் நின்றது. அதனை விஸ்வநாதனும், ராமமூர்ததியும் இணைந்து முடித்துக் கொடுத்தார்கள். அப்போது இந்தியில் சங்கர்&ஜெய்கிஷான் என்ற இரட்டை இசை அமைப்பாளர்கள் புகழ்பெற்றிருந்தார்கள். அவர்கள் போல நாமும் ஏன் இரட்டை இசை அமைப்பாளராக இருக்க கூடாது என்று கருதி. இவரும் இணைந்து இசை அமைப்பாளர் ஆனார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கிய 'பணம்'தான் இவர்கள் இசை அமைத்த முதல் படம். அதன் பிறகு இருவரும் இணைந்து 700 படங்களுக்குமேல் தங்கள் இசை சாம்ராஜ்யத்தை நடத்தினார்கள்.
யார் கண்பட்டதோ இருவருக்கும் தொழில் ரீதியான கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். விஸ்வநாதன் தனியாக தொடர்ந்து இசை அமைத்து வெற்றி பெற்றார். ஆனால் ராமமூர்த்தியால் வெற்றி பெற முடியவில்லை. பிரிவுக்கு பிறகு சுமார் 20 படங்களுக்கு இசை அமைத்தார் ராமமூர்த்தி. அதுவும் பெரிதாக பேசப்படவில்லை. 20 வருடங்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்து 'எங்கிருந்தோ வந்தாள்' என்ற படத்திற்கு இசை அமைத்தனர். அந்தப் படம் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு இருவரும் இணையவில்லை. தொழில் நிமித்தமாக பிரிந்தாலும் இருவரும் கடைசி வரை நல்ல நண்பர்களாக வாழ்ந்தார்கள்.