தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வருபவர் மா.கா.பா.ஆனந்த். மேலும், வானவராயன் வல்லவராயன் படத்தில் சினிமாவுக்கு வந்த அவர், நவரச திலகம், அட்டி போன்ற படங்களிலும் நடித்தார். தற்போது மாணிக் -என்ற படத்தில் நடிக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் அவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அச்சம் தவிர் ஷோவிலும் பங்கேற்று வந்தார். ஆனால் திடீரென்று அவரை காணவில்லை.
இதுபற்றி மா.கா.பா.ஆனந்தை கேட்டபோது, அச்சம் தவிர் நிகழ்ச்சியில் பங்கேற்பது சாதாரணமான விசயமல்ல. நிறைய ரிஸ்க் உள்ளது. ஆனபோதும் அதில் பங்கேற்று வருபவர்கள் துணிச்சலாக செயல்பட்டு வருவது பாராட்ட வேண்டிய விசயம். மேலும், நான் ஆரம்பத்தில் இருந்தே அந்த ஷோவில் பங்கு பெற்று வந்தேன். ஆனால் ஒரு ஷோவில் கலந்து கொண்டபோது, எனது காலில் அடிபட்டது. அதனால் அதையடுத்து என்னால் சகஜமாக செயல்பட முடியாது என்பதால் கடந்த சில நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கவில்லை.
ஆனால், காலில் காயம் ஆறியதும் மீண்டும் அச்சம் தவிர் நிகழ்ச்சியில் பங்கேற்பேன். மேலும், எனக்கு அடுத்தபடியாக மாணிக் படப்பிடிப்பும் இருப்பதால், அதற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இந்த ஷோவில் கலந்து கொள்வேன் என்கிறார் மா.கா.பா.ஆனந்த்.