வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் தொடர் சரவணன் மீனாட்சி. இந்த தொடரில் முதல் பாகத்தில் மிர்ச்சி செந்தில்- ஸ்ரீஜா ஜோடி சேர்ந்து
நடித்தனர். அதில் நடித்து வந்தபோதே அவர்களுக்கிடையே காதல் உருவாகி
பின்னர் திருமணமும் செய்து கொண்டனர். அதன்பிறகு அந்த சீரியலின் இரண்டாவது பாகத்தில் கவின்ராஜ் நாயகனாக நடிக்க, ரக்ஷிதா மகாலட்சுமி நாயகியாக நடித்தார். இவர்களும் டிவி நேயர்கள் மத்தியில் பேசப்படும் ஜோடியாக வலம்வந்தனர்.
இந்த நிலையில், தற்போது சரவணன் மீனாட்சி தொடரில் மூன்றாவது பாகம் தொடங்கியிருக்கும் நிலையில், இரண்டாவது பாகத்தில் நடித்த கவின்ராஜ்க்கு பதிலாக ரியோ என்ற புதியவர் நடிக்கிறார். ஆனால், நாயகியாக இரண்டாவது பாகத்தில் நடித்த ரக்ஷிதா மகாலட்சுமியே மூன்றாவது பாகத்திலும் தொடருகிறார். மீண்டும் அவர் இடம் பெறுவதற்கு முக்கிய காரணம், ரக்ஷிதாவிற்கு நிறைய ரசிகர் -ரசிகைகள் உள்ளார்களாம். அவரது அசத்தலான நடிப்புக்காகவே அந்த சீரியலை ஏராளமானோர் பார்த்து ரசித்து வந்தார்களாம். இந்த வரவேற்பு காரணமாகத்தான் சரவணன் மீனாட்சியின் மூன்றாவது பாகத்திலும் ரக்ஷிதாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.