ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
80,90களில் முன்னணி நடிகையாக ஜொலித்த நடிகை நதியா தற்போது ஹீரோ ஹீரோனிகளுக்கு அம்மா வேடங்களில் நடித்து வருகின்றார். இறுதியாக சமந்தாவிற்கு அம்மாவாக அ.ஆ எனும் தெலுங்கு படத்தில் நதியா நடித்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு மனைவியாக நதியா தெலுங்கு படமொன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவிருக்கும் வாஸ்கோடகாமா திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகவுள்ளது. இப்படத்தில் வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார். எஸ்.ஜே.சூர்யாவிற்கு மனைவியாக நடிகை நதியா நடிக்கின்றாராம். வில்லத்தனம் போக நதியாவுடன் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ரொமேன்ஸ் காட்சிகளையும் இயக்குனர் அமைத்துள்ளாராம். நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிக்கின்றார். தற்சமயம் ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் இயக்குனர் பிசியாகியுள்ளார்.