பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
வெண்ணிலா கபடிக்குழு, பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் ஹீரோக்களை விட நடிப்பில் நல்ல பெயரைப் பெற்ற நடிகர் கிஷோர், இப்போது காட்டையும், நாட்டையும் கலக்கி வந்த சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் "வனயுத்தம்" படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அதாவது வீரப்பன் கேரக்டரில் நடிக்கிறார். வீரப்பன் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாறை டைரக்டர் ராம்கோபால் வர்மா உள்ளிட்ட பல இயக்குனர் படமாக்க முயற்சி செய்தனர். லேட்டாக வேலையை ஆரம்பித்தாலும் முந்திக் கொண்டு சூட்டிங்கையே தொடங்கி விட்டார் குப்பி புகழ் டைரக்டர் ஏஎம்ஆர் ரமேஷ்.
படத்தில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கேரக்டரில், நடிக்க சென்னை 28 நடிகை விஜயலட்சுமியை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதிரடிப் படை தலைவர் விஜயகுமார் வேடத்தில் அர்ஜூனும், எஸ்.பி.செந்தாமரைக் கண்ணன் வேடத்தில் ரவி காலேவும் நடிக்க உள்ளனர். படத்தின் ஹைலைட்டாக கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதும், அவரை வீரப்பன் நடத்திய விதங்களும் இருக்குமாம். அதனால் ராஜ்குமார் அவரது மனைவி பர்வதம்மா கேரக்டரில் முக்கிய நடிகர், நடிகைகளை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர்.
வன யுத்தம் குறித்து டைரக்டர் ஏ.எம்.ஆர் ரமேஷ் அளித்துள்ள பேட்டியில், வீரப்பன் குறித்து ஏகப்பட்ட ஆராய்ச்சி செய்து இந்தப் படத்தை உள்ளது உள்ளபடி எடுக்கப் போகிறேன். வீரப்பன் வாழ்ந்த கோபி, நத்தம், ஒகேனக்கல் பகுதிகளில்தான் முழுப் படமும் எடுக்கப்படும், என்று கூறியுள்ளார்.