தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் ரஜினியை வைத்து இந்தியாவிலேயே அதிக பொருள் செலவில் 2.ஓ படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷைகுமார் நடித்து வருகிறார்.
டைரக்டர் ஷங்கருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கேட்டதற்கு பதிலளித்த அக்ஷைகுமார், ஷங்கர் இயக்குனரே அல்ல. அவர் ஒரு விஞ்ஞானி. அவரது படைப்பு முறைகள் ஒவ்வொன்றும் வியப்பை ஏற்படுத்துகிறது. இந்த படத்தை திரையில் பார்க்கும் போது நீங்கள் இந்தியாவில் இருப்பதையே மறந்து விடுவீர்கள். படத்தில் உள்ள சில விஷயங்களை நீங்கள் ஆசியாவிலேயே பார்த்திருக்க முடியாது. இதற்கு முன் நீங்கள் பார்த்ததில் இருந்து முற்றிலும் வேறுபட்ட விஷயங்களை இந்த படத்தில் ஷங்கர் காட்டி உள்ளார் புகழ்ந்து பேசினார்.
இப்படத்தில் ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ரஜினி அடுத்த வாரம் அமெரிக்காவில் இருந்து திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்க உள்ளது.