ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலரது நடிப்பில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதியன்று வெளியானது. வெளியான ஒரு சில நாட்களிலேயே இப்படம் மெகா ஹிட் என அறிவிக்கப்பட்டது. மொத்தமாக சுமார் 100 கோடி வரையிலான வசூலைப் பெற்றுள்ள இந்தப் படம் வரும் 22ம் தேதியன்று 100வது நாளைக் கொண்டாட உள்ளது. இந்த வருடத்தில் வெளிவந்த படங்களிலேயே அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டு 100வது நாளைத் தொடப் போகும் முதல் படம் இது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஏரியாக்களில் முழுமையாக வெளியாகாமல் இருந்தாலும் கூட 'தெறி' படம் மிகப் பெரிய வசூலைப் பெற்றது.
வரும் ஜுலை 22ம் தேதி 'தெறி' 100வது நாளைத் தொட இருப்பதால் விஜய் ரசிகர்கள் படம் ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டர்களில் விழாக்களை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்காக இப்போதே கட்-அவுட்டுகளையும், பேனர்களையும் அவர்கள் தயார் செய்து வருகிறார்கள். ஜுலை 22ம் தேதி ஒரு பக்கம் 'தெறி' 100வது நாள் கொண்டாட்டங்களும் இருக்கும், மறுபக்கம் 'கபாலி' படத்தின் வெளியீட்டுக் கொண்டாட்டங்களும் இருக்கும்.