ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரே சமயத்தில் தமிழிலும், தெலுங்கிலும் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட த்ரிஷா நடித்த 'நாயகி' திரைப்படம் தெலுங்கில் மட்டும் நேற்று முன்தினம் வெளியானது. ஆனால், எந்த ஒரு பரபரப்பையும் ஏற்படுத்தாமல் படம் இரண்டே நாளில் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி எதற்கும் த்ரிஷா வர மறுத்ததும் படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் என டோலிவுட்டில் சொல்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் மிகப் பெரிய ஹீரோக்கள் நடித்த படங்களுக்கே பிரமோஷன் தேவைப்படும் போது தெலுங்கில் கொஞ்சம் கூட மார்க்கெட் இல்லாத த்ரிஷா தனக்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரு படத்தின் பிரமோஷனுக்கு போக மறுத்துவிட்டார்.
இத்தனைக்கும் இந்தப் படத்தை த்ரிஷாவின் மேனேஜர்தான் தயாரித்தார். அவருக்கே இந்த நிலைமை என்றால் மற்ற தயாரிப்பாளர்களின் நிலை எப்படியிருக்கும் என டோலிவுட்டில் மிகவும் வருத்தப்படுகிறார்கள். தெலுங்கில் தோல்வியைத் தழுவியதால் இந்தப் படத்தை தமிழில் வெளியிடுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்ல த்ரிஷா தற்போது நடித்து வரும் 'மோகினி' படத்திற்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். தனது அடுத்த படங்களை மனதில் வைத்தாவது த்ரிஷா 'நாயகி' படத்திற்கு முக்கியத்தும் கொடுத்திருக்க வேண்டும் என்ற பேச்சு அதிகமாக எழுந்துள்ளது.