ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'36 வயதினிலே' படத்திற்கு பிறகு ஜோதிகாக நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். காதல், டூயட் இல்லாத நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க குடும்பமும் ஓகே சொல்லிவிட்டது. இந்த நிலையில் இதுவரை 50க்கும் மேற்பட்ட கதைகளை கேட்ட ஜோதிகாக 'குற்றம் கடிதல்' படத்தை இயக்கிய ஜி.பிரம்மாவின் கதைக்கு ஓகே சொல்லிவிட்டார். இதற்கான பணிகளையும் பிரம்மா உடனே தொடங்கிவிட்டார். நேற்று முன்தினம் படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.
பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் சரண்யா, பானுப்ரியா, ஊர்வசி என 3 மாஜி ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பானுப்ரியா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வருகிறார். இவர்கள் தவிர நாசர், லிவிங்ஸ்டன், குற்றம் கடிதல் படத்தில் நடித்த பாவெல், ஆகியோரும் நடிக்கிறார்கள். மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்கிறார், ஜிப்ரான் இசை அமைக்கிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. சூர்யாவை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்கவும் முயற்சி நடக்கிறது.