டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் மாறி மாறி நடித்துவந்த பிரியா ஆனந்திற்கு கிட்டத்தட்ட இது இலையுதிர்காலம் போலத்தான்.. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில படங்களை மட்டுமே கைவசம் வைத்துள்ள பிரியா ஆனந்த் இந்த வருடம் மலையாளத்திலும் கன்னடத்திலும் முதன்முறையாக கால் பதித்துள்ளார். மலையாளத்தில் பிருத்விராஜ் ஜோடியாக 'எஸ்ரா' என்கிற படத்திலும், கன்னடத்தில் புனித ராஜ்குமார் படத்திலும் நடித்து வருகிறார். இதில் மலையாளத்தில் இவர் நடிப்பது ஹாரர் படமாகும்.. தற்போது இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் பிரியா அனந்த்.
“தமிழில் சில பேய்ப்படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அவற்றில் எல்லாம் பெரும்பாலும் ஏற்கனவே வந்த படங்களின் கிளிஷேக்கள் நிறைய இருந்ததால் அவற்றை தவிர்த்துவிட்டேன்.. ஆனால் இந்தப்படத்தின் இயக்குனர் ஜெயகிருஷ்ணன் என்னிடம் 'எஸ்ரா' படத்தின் கதையையும் எனது கேரக்டரையும் பற்றி சொல்லும்போது கேட்பதற்கே நடுக்கமாக இருந்தது.. அதுமட்டுமா, இந்த ஒருவாரம் தான் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறேன்.. ஆனால் தினசரி ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு கிளம்பும்போது நடுக்கத்துடனேயே தான் கிளம்பி போகிறேன்.. அந்த அளவுக்கு இந்தப்படம் புதுவிதமான ஹாரர் த்ரில்லராக இருக்கும்” என்கிறார் பிரியா ஆனந்த்.