வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சில வருடங்களுக்கு முன் கேரளாவில் பரப்பரப்பான செய்திகளில் இடம்பிடித்தவர் தான் ஷாஜி தாமஸ்.. வாய் பேசமுடியாத, கேட்கும் திறனையும் இழந்த, ஏழாம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை கைவிட்ட இந்த ஷாஜி என்பவர் தனது விடாமுயற்சியால் மரக்கட்டைகளையும் பைக் இஞ்சினையும் வைத்து விமானம் ஒன்றை உருவாக்கி பறக்கவைத்தார். அந்த ஷாஜியின் கதைதான் இப்போது பிருத்விராஜின் படத்துக்கு சிக்கலை இழுத்து வந்துள்ளது. பத்திரிகையாளரான பிரதீப் எம்.நாயர் என்பவர் இந்த ஷாஜியின் வாழ்க்கை வரலாற்றை டீடெய்லாக அலசி, அதில் சினிமாவுக்கான கமர்ஷியல் விஷயங்களையும் கோர்த்து அழகான திரைக்கதையாக மாற்றி பிருத்விராஜிடம் சொல்லியிருக்கிறார்..
பிருத்விராஜுக்கு ரொம்பவே பிடித்துப்போக, இதில் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அசத்தலாக வெளியிட்டார்கள். மேலும் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இந்தப்படத்திற்காக ஒரிஜினல் ஷாஜியையே வரவழைத்து மூன்று குட்டி விமானங்களை தயாரிக்கும் பொறுப்பையும் வழங்கினார்கள். ஷாஜியிடம் அவரது கதையை படமாகும் உரிமையையும் முறைப்படி எழுதி வாங்கிவிட்டார்கள். ஆனால் இப்போது திடீரென எதிர்பாராத ஒரு சிக்கல் கிளம்பியுள்ளது. அதாவது ஸ்ரீகாந்த் முரளி என்பவரும் இதே கதையை அடிப்படையாக கொண்டு ஒரு படத்தை இயக்குகிறாராம்.
இந்தப்படத்திற்கான கதையை பிரபல கதாசிரியர் சந்தோஷ் எச்சிக்கானம் என்பவர் எழுதியுள்ளாராம். இந்தப்படத்தில் கதாநாயகனாக வினித் சீனிவாசன் நடிக்க இருப்பதாக தெரிகிறது. ஆனால் இப்படி ஒரே மாதிரி அமைப்புள்ள கதை என தெரிந்ததும் பிரதீப் நாயர், மலையாள இயக்குனர்கள் சங்கத்தில் முறையிட்டார். ஆனால் பலன் ஏதும் கிடைக்கவில்லை.. அதனால் தொடுபுழாவில் உள்ள நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடுக்கவுள்ளார். அதேசமயம் எதிர்த்தரப்பை சேர்ந்த கதாசிரியரோ, ஷாஜி தாமசின் கதைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும், இந்த கதையின் நாயகன் அவரைப்போல மாற்றுத்திறனாளி அல்ல என்றும் கூறியுள்ளார்.. ஆனாலும் கதையின் நாயகன் தனது திறமையால் தனியாக விமானங்களை உருவாக்குகிறான் என்பதுதான் மையக்கரு என்பதை அவர் மறுக்கவில்லை.