ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க தெரிந்தவர்கள் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறார்கள் போலத்தான் தெரிகிறது.. நாளுக்கு நாள் ஒவ்வொரு படங்களுக்கும் எதிராக சோஷியல் மீடியாவில் குவியும் எதிர் கருத்துக்கள் அதைத்தான் உணர்த்துவதாக இருக்கின்றன. எந்த படத்திலாவது வக்கீலை மோசமாக காட்டிவிட்டால், வக்கீல் சங்கத்தில் இருந்து சிலர் போர்க்கொடி தூக்கி கிளம்பி விடுகின்றனர்.. தயாரிப்பாளர் கதாபாத்திரம் ஒன்றை மோசமான வில்லனாக காட்டிவிட்டால், உடனே சம்பந்தப்பட்ட இயக்குனருக்கு ரெட் கார்டு போடும் அளவுக்கு சீரியஸாகி விடுகின்றனர். இப்படி எல்லா தரப்பினரையும் நல்லவராகவே காட்டிவிட்டால் அப்புறம் சினிமா எப்படி எடுப்பதாம்..?
அதுபோன்ற ஒரு சிக்கலைத்தான் சமீபத்தில் வெளியான 'கசபா' படமும் அதில் போலீஸ் அதிகாரியாக நடித்த மம்முட்டியும் தற்போது எதிர்கொண்டு வருகிறார்கள். படத்தில் ராஜன் சக்காரியா என்கிற மம்முட்டியின் போலீஸ் கதாபாத்திரம் தப்பு செய்தவர்களை தட்டிக்கேட்கும் கடமை உணர்ச்சி உள்ள ஆள் தான் என்றாலும், அவர் சக பெண்களிடம் குறிப்பாக சக போலீஸ் அதிகாரிகளிடமும், பாலியல் தொழிலாளிகளிடமும் நடந்துகொள்ளும் விதம் மற்றும் பேசும் வசனங்கள் தான் சர்ச்சையை கிளப்பியுள்ளன..
உயர் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கிண்டலாக மம்முட்டியிடம் 'சீனியருக்கு சல்யூட் அடிக்க மாட்டாயா' என கேட்பார். அதற்கு மம்முட்டியோ, “அடிக்கமாட்டேன்.. ஆனால் உன்னை ஒருவாரத்திற்கு நேராக நடக்க முடியாமல் செய்ய என்னால் முடியும்” என்பார்.. உயர் அதிகாரி வரும்போது சிகரெட் புகைத்துக்கொண்டு இருக்கும் மம்முட்டி, அதை மறைப்பதற்காக பக்கத்தில் இருக்கும் இன்னொரு பெண் போலீஸ் அதிகாரியிடம் வலுக்கட்டாயமாக திணித்துவிட்டு போவார்.. இது போன்ற காட்சிகளுக்கு தியேட்டர்களிலும் விசில் பறக்கவே செய்கின்றது.. ஆனால் பொறுப்பான நடிகரான மம்முட்டி, இப்படி மோசமான வசனங்களை பேசி, அநாகரிமான காட்சிகளில் நடிப்பதை தவிர்த்திருக்க வேண்டும் என காவல் துறையிலேயே சில குமுறல்கள் வெளிப்பட்டு வருகிறதாம்.