ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லுவனுக்கு புல்லும் ஆயுதம், மற்றும் இனிமே இப்படித்தான் ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே மீண்டும் காமெடியனாக நடிக்கும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தன்னுடைய பய நண்பர் ராம்பாலாவை அழைத்து வந்து கதை கேட்டார் சந்தானம். அவர் சொன்ன பேய் கதை பிடித்துப்போய் தில்லுக்கு துட்டு படத்தில் நடித்தார்.
சமீபத்தில் வெளியான 'தில்லுக்கு துட்டு' படம் விமர்சன ரீதியில் பாராட்டப்படவில்லை என்றாலும் நல்ல வசூலை அள்ளி வருகிறது. 'தில்லுக்கு துட்டு' படத்துக்கு கமர்ஷியலாக வெற்றி கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் சந்தானத்துக்கு அடுத்து ஒரு மகிழ்ச்சி. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதை சந்தானமே ட்விட்டர் பக்கம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இந்த படம் சம்பந்தமான கூடுதல் விவரங்களை வரும் நாட்களில் தெரிவிக்க இருப்பதாகவும் சந்தானம் குறிப்பிட்டுள்ளார்.
செல்வராகவன் தற்போது இயக்கி வரும் படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. அது முடிவடைந்த பிறகே சந்தானம் நடிக்கும் படத்தின் வேலைகள் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது. அநேகமாக வரும் செப்டம்பரில் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
"பொதுவாகவே செல்வராகவன் சார் என்றாலே, சீரியஸான மனிதர் தான்...அவர் படங்கள் எல்லாம் உணர்ச்சிகரமாக தான் இருக்கும்... போன்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. செல்வராகவன் சாரிடம் சிறந்த நகைச்சுவை உணர்வு இருக்கிறது. உணர்ச்சிகரமான படங்களாக இருந்தாலும், அந்த நகைச்சுவை உணர்வை அவரது திரைப்படங்களில் நம்மால் உணர முடியும்..."என்கிறார் நடிகர் சந்தானம்.
அதேசமயம் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை முடிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் அதன் தயாரிப்பாளரான கௌதம் மேனன். அவர் மனசு வைத்தால்தான் சந்தானம் - செல்வராகவன் புராஜக்ட் டேக் ஆஃப் ஆகும் என்பதே தற்போதைய நிலவரம்.